விஜய் டிவியில் ஒளிபரப்பான “கல்யாணம் முதல் காதல் வரை” என்ற தொடரின் மூலம் அறிமுகமானார் நடிகை சைத்ரா ரெட்டி. இருப்பினும் இவர் மிகவும் பிரபலமானது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய “யாரடி நீ மோகினி” சீரியல் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதோடு யாரடி நீ மோகினி சீரியலில் ஸ்வேதா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டி இருந்தார். இந்த சீரியலின் மூலம் தமிழக ரசிகர்களிடம் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார். நடிகை சைத்ரா ரெட்டி பெங்களூருவை சேர்ந்தவர். இவர் அணியும் உடைகள் மற்றும் ஸ்டைலுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளன.
நடிகை சைத்ரா ரெட்டி சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது சைத்ரா ரெட்டி சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கயல் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக சஞ்சீவ் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கயல் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் சித்ராவுக்கு அடிபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுவும் பைக்கில் இருந்து கீழே விழுந்ததாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆகையால் அவர் தொடர்ந்து ஷூட்டிங்கில் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது சன் டிவியில் கயல் சீரியல் டிஆர்பி நல்ல ரேட்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.