ஜெய்பீம் சூர்யா தயாரிப்பில் நடித்து வெளியான இந்தப் படம் அமேசான் OTT தளத்தில் வெளியானது வெளியான நாள் முதலே இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர் அதுமட்டுமல்லாமல் பழங்குடியின மக்கள் படும் அவஸ்தைகள் பற்றி எடுத்துக் கூறியதற்கு சூர்யாவிற்கு பல தரப்பிலிருந்து பாராட்டுகள் வந்து கொண்டிருந்தது.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு இந்த படத்தை சூர்யா போட்டு காண்பித்திருக்கிறார் படத்தை பார்த்து ஸ்டாலின் அவர்கள் படத்தை புகழ்ந்து பாராட்டி கடிதம் ஒன்றை வெளியிட்டார்.
ஒரு பக்கம் வெற்றியையும் புகழையும் பார்த்த ஜெய்பீம் படக்குழுவினர் மறுப்பக்கம் ஜெய்பீம் படத்தில் தவறாக சித்தரித்து வன்னியர்களை புண்படுத்தி உள்ளார்கள் என்று குற்றச்சாட்டை முன்வைத்து வந்தது மற்றொரு தரப்பு.
பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் வன்னியர் அமைப்புகள் ஜெய்பீம் படத்திற்கு பெரிய எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். காடுவெட்டி குரு அவர்களின் மகன் கனலரசன் என்பவர் கூட சமீபத்தில் ஒரு பேட்டியில் துப்பாக்கி ஏந்திய 5 போலீசாரால் சூர்யாவை காப்பாற்றிவிட முடியாது 10,000 பேர் கூடினால் என்று சமீபத்தில் பேட்டி கொடுத்திருந்தார்.
சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு இருந்தும் நாளுக்கு நாள் ஜெய்பீம் பற்றி ஏதாவது எதிர்ப்புகள் கிளம்பி கொண்டே இருக்க ஜெய்பீம் படத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழக நாடோடிகள் பழங்குடி கூட்டமைப்பைச் சார்ந்த மக்கள் பாம்பு மற்றும் எலி அனைத்தையும் எடுத்துக்கொண்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு படையெடுத்தனர்.
எங்களின் கஷ்டங்களை எடுத்துச் சொன்ன சூர்யாவிற்கு எதிராக சில அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள் அவரை மிரட்டுகிறார்கள் நடிகர் சூர்யாவிற்கு ஏதாவது அசம்பாவிதம் செய்ய யாராவது நினைத்தால் அவர்கள் மீது பாம்புகளை எறிவோம் என்று மிரட்டி சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு கூடிய அவர்கள் சூர்யாவிற்கும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.