கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி, கஞ்சா கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு மதுரையில் நேற்று தென்மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அவர் பேசியதாவது தென்மாவட்டங்களில் ரவுடிகள் மீதும் சில சம்பவங்கள் நடந்துள்ளன. அதை தவிர்க்க அவர்கள் மீது குண்டர் சட்டம் உட்பட கடுமையான சட்டங்கள் மூலம் தண்டனை வாங்கித்தர வேண்டும். ரவுடிகள் மீது பழைய வழக்குகளை துரிதப்படுத்தி அதிகபட்ச தண்டனை வாங்கித்தர வேண்டும். கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி, கஞ்சா கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரை தரம்பிரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை நகரில் போலீசார் பரிசு வழங்கி பாராட்டினார் .தேனி மாவட்டம் வீரபாண்டி எஸ்ஐ ஜோதிராஜ் கொரோனா கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு பணமின்றி தவிர்த்ததை அறிந்த டிஜிபி சைலேந்திரபாபு அவரது குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கியுள்ளார்.