சென்னையில் பிஎஸ்பிபி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவ மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்கள் எழுந்தது ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடைகளை அணிந்து வருவது மாணவிகளின் மொபைல் நம்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் தவறான குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற புகார்கள் வந்து கொண்டே இருந்துள்ளது.
இந்நிலையில் ஆசிரியர் ராஜகோபாலனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறிவருகிறார் இதைக் குறித்து பல்வேறு திரை பிரபலங்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 96 ,கர்ணன், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த பிரபலமான நடிகை கவுரி கிஷன் அடையாறில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற போது நடந்த கசப்பான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
நான் படித்த போது ஆசிரியர்கள் சிலர் மாணவ மாணவிகளை அசிங்கமாக பேசுவது கேரக்டரை கேவலப்படுத்துவது சாதியை வைத்துப் பேசுவது கிண்டல் செய்வது மிரட்டுவது உடல் அமைப்பை வைத்த கேலி செய்வது ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை மாணவ மாணவியர் மீது சுமத்துவது போன்ற பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளேன்.
நான் மட்டுமல்லாமல் என்னுடன் சேர்ந்து பயின்ற அனைவருமே சந்தித்துள்ளோம் என கவுரி கூறியுள்ளார் மேலும் தற்போது அதேபோல் பிரச்சனைகள் நடந்தால் தயங்காமல் கூறும்படி கேட்டுள்ளார் உங்களின் பெயர்கள் வெளியே சொல்லாமல் பள்ளி நிர்வாகத்தின் மேல் தக்க தண்டனை பெற்று தருவேன் என இன்ஸ்டா பக்கத்தில் பதிவை பதிவிட்டுள்ளார்.