Sunday, May 19, 2024
-- Advertisement--

சென்னையில் உள்ள பிரபல ITC கிராண்ட் சோழா ஹோட்டலில் 85 பேருக்கு கொரோனா தொற்று..!!! அதிர்ச்சியில் மக்கள்.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நேரத்தில் திடீரென்று சென்னையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் 85 பேருக்கு கொரோனா என்ற செய்தி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் இருந்த கொரோனா தாக்கத்தை விட தற்பொழுது மிக குறைவான நிலையில் இருக்கும் நேரத்தில் பிரிட்டனில் இருந்து கொரோனா உருமாறி வருகிறது என்ற செய்தி கிடைத்த உடனே தமிழகத்தில் பரவாமல் இருப்பதற்காக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது தமிழக அரசு.

இதுவரை தமிழகத்தில் உருமாறிய கொரோனவால் எந்த பாதிப்பும் இல்லாமல் மக்கள் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் சென்னையில் உள்ள பிரபல ஐடிசி கிராண்ட் சோழா என்ற ஹோட்டலில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஹோட்டலில் தங்கியிருந்தவர், பணிபுரிபவர்கள் அனைவருக்கும் செய்யப்பட்ட பரிசோதனையில் 85 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் ஜனவரி 10-ஆம் தேதி வரை எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என்று அரசு தரப்பில் கூறியுள்ளார்கள்.

தற்பொழுது கொரோனா பாதிக்கப்பட்ட 85 பேரில் நிறைய பேர் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர் சில பேருக்கு லேசான அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles