Sunday, May 12, 2024
-- Advertisement--

தனது 6 மகள்களையும் டாக்டர் ஆக்கி அழகு பார்த்த 5ஆம் வகுப்பு படித்த தாய்…!!!

கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு பகுதியை சேர்த்த பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய பெண் தனது 6 மகள்களையும் டாக்டர் ஆக்கினார். தன்னுடைய 6 மகள்களையும் டாக்டர் ஆகிய அந்தப் பெண்ணின் பெயர் சாய்னா. சாய்னாவின் கதை அனைவரும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது. ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தாய் நாம் அவர் தனது உறவினர் டிவிபி அகமது குஞ்சம்மை திருமணம் செய்து கொள்வதற்காக தனது படிப்பை பாதியில் நிறுத்தினார்.

அப்போது அவருக்கு வயது 12. அகமது சென்னையில் வியாபாரம் பார்த்து வந்தார். திருமணத்திற்குப் பிறகு கத்தார் சென்று அங்கு வேலை பார்த்தார். மேலும் மனைவியுடன் குடியேறினார். சாய்னாவுக்கு ஆறு மகள்கள் பிறந்தனர். ஆனால் அதற்காக தம்பதியர் கவலைப்படவில்லை. மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக மாற வேண்டும் என்று விரும்பினர். அதற்காக தங்களது மகள்களுக்கு நல்ல கல்வியை அளிக்க அகமது முடிவு செய்தார்.

மூத்தவர் பாத்திமா, ஹாஜிரா, ஆயிஷா, பயிசா, ரகுனாஸ் மற்றும் இளையவர் அமீரா. ஆறு மகள்களும் நன்கு படித்தனர். அனைவரும் தற்போது டாக்டர்களாக உள்ளார். எனது பிரசவத்தைப் பற்றி எங்கள் ஊரில் உள்ள பெண்கள் கேள்விப்பட்டு போதெல்லாம் அவர்கள் கவலைப்படுவார்கள் தான் பெண் குழந்தைகளை வளர்ப்பது பற்றி கவலைப்படவில்லை. நான் அவர்களில் ஒரு சுமையாக நினைக்கவில்லை. நான் என் குழந்தைகள் என்பது உறுதியாக இருந்தேன்.

நன்றாக படித்து அவர்களின் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய வேண்டும் என என் கணவர் நிறைய புத்தகங்கள் வாங்கினார். அவர்களுக்கு பொது அறிவு இருக்க வேண்டும் என்று விரும்பினார். சாய்னாவின் முதல் நான்கு மகள்களும் தற்போது டாக்டராக பணியாற்றி வருகிறார்கள். சென்னையில் எம்பிபிஎஸ் இறுதியாண்டு கடைசி பெண், மங்களூருவில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் இன்னும் கூடுதல் சிறப்பு என்னவென்றால் முதல் நான்கு மகள்களின் கணவர்களும் டாக்டர்கள்தான்.

கத்தாரில் பணியாற்றிவந்த அகமது தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தார் தான் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு அது நடக்காமல் போனதால் தனது ஆறு மகள்களையும் டாக்டர் ஆகிவிட்டார். மகளின் திருமணத்தின் போது இருவரும் ஒரே துறையில் இருந்ததால் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியும் விட்டுக்கொடுக்காமல் போவார்கள் என்பதால் டாக்டர் படித்த மணமகனை தேர்வு செய்ததாகவும் கூறினார்.

சுமார் 35 ஆண்டுகள் கத்தாரில் பணியாற்றிவிட்டு தம்பதிகள் தங்களது மகள்களிடம் கேரளா திரும்பிவிட்டனர். மாரடைப்பால் மரணம் அடைந்தார். அப்போது இரண்டு மகள்களுக்கு மட்டுமே திருமணமாகியிருந்தது. தனது கணவரின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் மற்ற இரண்டு மகள்களுக்கும் டாக்டர்களுக்கு மணமுடித்து வைத்ததோடு கடைசி இரண்டு மகள்களும் டாக்டர் படிக்க வைக்க துணையாக இருந்து வருகிறார் சாய்னா.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles