Thursday, May 2, 2024
-- Advertisement--

கொரோனா தொற்றில் 10 நாட்களில் 500 குழந்தைகள் பாதிப்பு…!!! மூன்றாவது அலை வந்துவிட்டதோ என பெற்றோர்கள் அச்சம்.

கர்நாடகாவில் கடந்த பத்து நாட்களில் மட்டுமே 500 குழந்தைகள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கொரோனா தொற்று படிப்படியாக மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 10 நாட்களில் பெங்களூருவில் 500 குழந்தைகள் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கர்நாடகா சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை பெங்களூருவில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் பத்து நாட்களில் மட்டுமே 499 குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதிலும் கடைசி ஐந்து நாட்களில் மட்டும் 263 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 9 வயதுக்கு உட்பட்டவர்கள் 88 பேரும் 10 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் 175 பேரும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த சில வாரங்களில் இந்த எண்ணிக்கை இதை விட மூன்று மடங்கு அதிகம் ஆகலாம் என்று எச்சரித்து உள்ளது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles