Tuesday, May 7, 2024
-- Advertisement--

நடுரோட்டில் பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட இருவருக்கு தக்க தண்டனை வழங்கிய காவல் துறையினர்..!!

நடுரோட்டில் தகாத முறையில் இரண்டு இளைஞர்கள் நடந்து கொண்டதற்காக காவல்துறையினர் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கியுள்ளனர். இது குறித்த வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு இளைஞர்கள் பெண்களிடம் சில்மிஷம் செய்துள்ளனர் என புகார் வந்துள்ளது. இதனை அடுத்து இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

இவர்களை அழைத்துச் செல்லும் பொழுது தோப்புக்கரணம் போட்டு கொண்டே செல்லுமாறு காதலர்களுக்கு நூதன தண்டனை வழங்கினர். இதுமட்டுமல்லாமல் நடந்து சென்று இருக்கும்போது சுற்றிலும் நின்று போலீசார் அவர்கள் இருவரையும் அடித்து கொண்டே சென்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் காவல்துறை மீது நம்பிக்கையையும் வரவழைத்தது.

பெண்களை சில்மிஷம் செய்வதற்கு இது சரியான தண்டனை என பொதுமக்கள் மத்தியில் மட்டுமன்றி அந்த காவலர்களுக்கு பாராட்டுகளும் எழுந்து வருகின்றன.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles