Saturday, May 4, 2024
-- Advertisement--

மாவட்ட அளவில் +2 தேர்வு நடத்த பொது கல்வி துறை ஏற்பாடுகள் தொடங்கின!!! விபரம் உள்ளே.

பளஸ் 2 மாணவர்களுக்கு மாவட்ட அளவில் மாதிரி பொது தேர்வு நடத்த தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களில் பிளஸ்2 தவிர மற்ற மாணவர்கள் தேர்வுகள் எழுதாமல் ஆல் பாஸ் செய்யப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வுக்கு அவர்களின் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக வழிமுறைகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. பிளஸ் டூ மாணவர்களுக்கு மட்டும் கொரோனா பரவல் முடிந்ததும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இரண்டாம் கட்டமாக தேர்வுகள் நடத்துவதற்கான வரைவு விதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பிளஸ் டூ மாணவர்கள் வீட்டில் இருப்பதால் அவர்கள் பாடங்களை மறந்து விடாமல் இருக்க திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இரண்டு முறை திருப்புதல் தேர்வையும் முடித்த பள்ளிகள் அனைத்து பாடங்களையும் இணைத்து மாவட்ட அளவில் பொதுவாக வினாத்தாள் உடன் மாதிரி பொதுத் தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் இருந்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வாட்ஸ்அப் வெளியே தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வுக்கு வராமலிருக்கவும் அவர்களை தேர்வுக்கு படிக்கவும் பாடங்களை நினைவுபடுத்தும் வகையிலும் இந்த மாதிரி பொதுத் தேர்வு நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles