ஃபேஸ்புக்கில் பழகி காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவியை இரண்டே மாதத்தில் ரூபாய் 1.80 லட்சத்திற்கு விற்பனை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் பொலன்கிர் மாவட்டத்திலுள்ள சுலேகலா என்ற ஊரை சேர்ந்தவர் ராஜேஷ் ராணா 17 இவர் பேஸ்புக்கில் 26 வயதுடைய பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. அவர் சில நாட்களில் பேஸ்புக்கில் பழகிய நிலையில் காதல் மலர்ந்தது. இருவரும் காதலித்தது பெற்றோர்களுக்கு தெரியவந்தது. மேலும் இருவீட்டாரின் சம்மதத்துடன் முறைப்படி திருமணம் நடைபெற ஏற்பாடு செய்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து வைத்தனர். மேலும் இதையடுத்து கணவன் மனைவி இருவரும் ராஜஸ்தானில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக வந்தனர். ஆனால் வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே ராஜேஷ் தனது மனைவியை செங்கல் சூளையில் வேலை பார்க்கும் 55 வயதுடைய ஒருவரிடம் ரூபாய் 1.80 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ராஜேஷ் மனைவியை விற்பனை செய்த பணத்தில் ஸ்மார்ட் போன் வாங்கியதோடு, ஆடம்பரமாக செலவு செய்துள்ளார்.
மேலும் ராஜேஷ் மனைவியின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டு “உங்கள் மகள் யாருடனோ ஓடி விட்டார்” என தெரிவித்துள்ளார். அதனை நம்பாத அப்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில் தங்களது மகளை காணவில்லை என புகார் கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
போலீஸ் விசாரணையில் அப்பெண் ராஜஸ்தானில் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து ஒரிசாவில் இருந்து தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலத்திற்கு விரைந்தனர். அந்தப் பெண் ஒடிசாவில் உள்ள பழம் என்ற கிராமத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர். காவல்துறையினர் இது குறித்து இன்ஸ்பெக்டர் முண்டா கூறுகையில் 55 வயது நபர் 1.80 லட்சத்திற்கு வாங்கியதாக தெரிவித்தார். ஆனாலும் ராஜஸ்தான் போலீசார் உதவியோடு அந்த பெண்ணை மீட்டோம். ஆனால் அந்தப் பெண்ணை அந்த கிராம மக்கள் அழைத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.
அவர்கள் போலீஸ் வேனை மறைத்துக் கொண்டு செல்ல விடாமல் தடுத்தனர். கிராம மக்களிடம் இருந்து போராடி பெண்ணை மீட்டோம். மேலும் பெண்ணை விற்பனை செய்த ராஜேஷ் நான் என் மனைவியை விற்பனை செய்யவில்லை என்றும் இருதய அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால் மனைவியை 60 ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்தேன் என கூறியுள்ளார். ராஜேஷ் கைது செய்யப்பட்டு சிறுவர் முகாமில் அடைக்கப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.