மரணம் என்றுமே நிச்சயிக்க படாத ஒன்று தான். ஆறிலும் சாவு அறுவதிலும் சாவு என்று ஒரு பழமொழி உள்ளது. யாருக்கு எப்போது சாவு வரும் என்று யாராலும் கணிக்கமுடியாது. அதே நிலையில் இந்த ஆண்டைப் பொறுத்தவரை பல மரணங்கள் எதிர்பார்க்காத வகையில் நிகழ்ந்து வருகின்றன.
ஒரு பக்கம் கொரானா நாட்டையே உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. இன்னும் பல இளைஞர்கள் சிறுவயதிலேயே இறக்கும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் மொபைல் சார்ஜ் செய்யும் பொழுது திடீரென ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளா. ர் இவருக்கு வயது 17தான் ஆகி உள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த கொடுங்கையூர் என்ற பகுதியில் வசிப்பவர் சஞ்சய் இவருக்கு வயது 17. சஞ்சய் தனது உறவினர் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு வேலை முடித்து விட்டு செல்போனுக்கு சார்ஜ் போடும் பொழுது அவர் திடீரென மின்சாரம் தாக்கியதால் மயக்கமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அழைத்துச் சென்றனர்.
ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திஉள்ளது. அவர் உடல் பெரியம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தரம் குறைவான மொபைல் சார்ஜரை வாங்கி பயன் படுத்தியதால் இது போன்ற ஷாக் அடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், தரம் உள்ள சார்ஜர் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஒரு சாதாரண போனால் உயிர் கொள்ளும் அளவிற்கு மாறியது அந்த பகுதி மக்களை மிகவும் அச்சத்தில் ஏற்படுத்தியது.