Wednesday, May 8, 2024
-- Advertisement--

உலகிலேயே எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்யாத வரலாற்று சாதனையை தமிழக காங்கிரஸ் கமிட்டி செய்துள்ளது…! அது என்ன தெரியுமா…?

சென்னையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் 150 அடி உயர கொடிமரத்தில் கொடி ஏற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இது உலகிலேயே எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்யாத சாதனையை இது அமைந்து உள்ளது .இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் மாநில நிர்வாகி கட்சியின் அகில இந்திய தலைமை வாழ்த்து தெரிவித்துள்ளது .

இதில் 150 அடி உயர கொடி கம்பத்தில் பறக்கவிடப்பட்டு உள்ள கொடியின் அளவு அகலம் 35 அடி, நீளம் 20 அடி என வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்த கொடிக்கம்பம் முழுக்க முழுக்க சென்சார் உதவியுடன் அதிக நவீன தகவல் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கொடி ஏற்றுவதும், பறக்க விடுவதும் என எல்லாமே ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதில் திமுக தலைமையகமாக அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கொடிமரத்தின் உயரம் 114 அடியாகும் இது தென்னிந்தியாவிலேயே அதிக உயரம் கொண்ட கொடிக்கம்பம் என கூறப்பட்டு வந்த நிலையில் இது சாதனையை முறியடித்துள்ளது என்று தமிழக காங்கிரஸ் இந்திய பாகிஸ்தான் எல்லையான வாகாவில் 360 அடி உயர கொடி நிறுவப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்,

தமிழக காங்கிரஸ் கமிட்டியில் நிறுவப்பட்டுள்ள இந்த 150 அடி உயர கொடி கம்பத்தில் மொத்த செலவு 20 லட்சம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் சேர்ந்த இந்நிறுவனம் இதை வடிவமைத்து பொருந்தியதாக தெரிகிறது. கொடிமரத்தின் உயரம் அதிகம் என்பதால் அடித்தளத்தில் கான்கிரீட் கலவை கொண்டு வலிமையாக கட்டப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles