திருப்பத்தூரில் 100 வயதைக் கடந்த மூதாட்டி தாமாக முன்வந்து கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டார். இதைக்கண்ட செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பட பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் எட்டாவது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
அதில் வீடு வீடாக சென்றும் நிரந்தர முகாம்களிலும் நேற்று (நவம்பர் 28 ) தடுப்பு ஊசி போடப்பட்டது. மேலும் நாட்றம்பள்ளி அடுத்து ஆத்தூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த 100 வயதை கடந்த மூதாட்டி அன்னம்மாள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள தானாக முன்வந்து செலுத்திக் கொண்டார்.
இளம் வயதினரை பல காரணங்கள் கூறி தடுப்பூசி செலுத்தி கொள்ள வராமல் இருக்கும் நிலையில் 100 வயதை கடந்த மூதாட்டி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டது. அங்குள்ள செவிலியர் மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது போன்ற பொது மக்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் எனக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.