Home NEWS கணவர் இப்படி செய்ததால் சித்ரா தற்கொலை செய்து கொண்டார் போலீசார் அறிக்கையினால் பரபரப்பான நீதிமன்றம்.

கணவர் இப்படி செய்ததால் சித்ரா தற்கொலை செய்து கொண்டார் போலீசார் அறிக்கையினால் பரபரப்பான நீதிமன்றம்.

vj chitra case

நடத்தையில் கணவர் சந்தேகப்பட்டது தான் நடிகை சித்ரா தற்கொலைக்கு காரணம் என்று போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் ஏகப்பட்ட கோணத்தில் சிபிஐ அதிகாரிகளால் விசாரணை நடந்து வருகிறது இந்நிலையில் சித்ராவின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேமந்த் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார் இவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சித்ராவின் தந்தை மனு தாக்கல் செய்திருந்தார்.

ஹேமந்த் பத்து ஆண்டு கால நண்பர் சையது ரோஹித் என்பவர் ஹேமந்த்துக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

நேற்று நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்த இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கூறியது கைதான அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று யார் வேண்டுமானாலும் மனுத்தாக்கல் மனுதாக்கல் செய்ய முடியாது. சையது ரோஹித் மனு தாக்கல் செய்ய மனுதாரர் அடிப்படை உரிமை இல்லை இந்த மனுவை ஏற்க முடியாது என்று நிராகரித்திருந்தார்.

சித்ராவின் தந்தை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சித்ராவின் கழுத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான தடம் எதுவும் பதியவில்லை அவரது உடலில் இரண்டு இடங்களில் ரத்த காயம் உள்ளது என்று கூறப்பட்டிருந்தது இதற்கு பதில் அளிக்கும் விதமாக அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் பிரபாவதி சித்ரா தூக்குப்போட்டு மூச்சுத்திணறலால் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அவர் பட்டுப்புடவையில் தூக்கு போட்டதால் கழுத்தில் தடம் எதுவும் பதியவில்லை மேலும் சித்ராவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு ஹேமந்த் திட்டியதால் அவர் தற்கொலை செய்து உள்ளார் என்று நசரத்பேட்டை போலீசார் அறிக்கை தாக்கல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது இதனால் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை வருகிற பிப்ரவரி 2ஆம் தேதி தள்ளி வைத்துள்ளார் இதற்கு போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version