வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் திருப்பதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஏழுமலையான் கோவில் மலை நடைபாதையில் மழை வெள்ளம் கொட்டுகிறது. இதனால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆங்காங்கு மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. கபலேஸ்வரர் கோயில் உள்ள கபிலர் தீர்த்த அறிவியல் ஆர்ப்பரித்து வெள்ளநீர் செல்கிறது. இதனால் திருப்பதி நகர் முழுவதும் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதில் வாகனங்களும் அடித்து செல்லப்பட்டன. திருப்பதி ஆர்ஜித அலுவலகத்திலும் வெள்ளம் புகுந்ததால் கம்ப்யூட்டர் சர்வர்கள் முடங்கியது.இதனால் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு அறைகள் ஒதுக்கீடு பணிகள் பாதித்தன.