Home CINEMA NEWS விஜயின் மக்கள் இயக்கம் வலு இழந்துவிட்டது பொங்கி எழுந்த விஜயின் தந்தை SAC…!!! சதாபிஷேக விழாவிற்கு...

விஜயின் மக்கள் இயக்கம் வலு இழந்துவிட்டது பொங்கி எழுந்த விஜயின் தந்தை SAC…!!! சதாபிஷேக விழாவிற்கு விஜய் கலந்து கொள்ளாததுக்கு இது தான் காரணமோ..?

vijay makkal iyakam not strong said by vijay father SAC

நேற்று எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் 80 வயதை முன்னிட்டு சதாபிஷேகம் திருக்கடையூரில் நடந்தது. பெற்றோர்கள் சதாபிஷேகம் விஜய் முன்னின்று நடத்த வேண்டிய இடத்தில் விஜய் வராதது பலருக்கும் பெரும் வருத்தத்தை அளித்தது.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு தனது மனைவியுடன் வந்து சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு விஜயின் பெயரில் அர்ச்சனை செய்து கொண்டு சென்றார் SAC. விஜய் மீது நேற்று கடும் வருத்தத்தில் இருந்தார்கள் நெட்டிசன்கள்.

விஜய் அவருடைய தந்தையின் சதாபிஷேக விழாவில் கலந்துகொள்ளவில்லை அவர் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவரது மனைவி அல்லது மகன் மகளை அனுப்பி இருக்கலாமே என்று கூறி வந்தனர் ஆனால் இன்று வெளியான SAC அவர்களின் பேட்டியை பார்த்த பின் ஒருவேளை இது தான் காரணமாக இருக்குமோ என்று அனைவரும் கணிக்க தொடங்கிவிட்டார்கள்.

சமீபத்தில் செய்தியாளருக்கு பேட்டி கொடுத்த விஜயின் தந்தை SAC அவர்கள் விஜய்யின் மக்கள் இயக்கம் வலு இழந்து வருவதாகவும் பழைய உறுப்பினர்கள் அனைவரையும் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் இணைக்க நான் முயற்சி செய்து வருகிறேன். விஜய் விஜய் மந்திரத்தை தவிர அவர்களுக்கு எதுவும் தெரியாது பழைய தொண்டர்கள் இன்றும் விஜய்க்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திரும்ப இவர்கள் அனைவரையும் அந்த இயக்கத்தில் சேர்த்து விட நான் பாடுபட்டு கொண்டிருக்கிறேன்.

நான் அந்த இயக்கத்திற்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படவில்லை. விஜயின் பிறந்த நாள் தினத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் அதிரும் மதுரை எடுத்திக்கிட்டிங்கனா பிறந்தநாள் தினத்தில் சுவர்கள் எங்கேயும் காலியாக இருக்காது அந்த அளவு விஜயின் போஸ்டர்ஸ் இருக்கும்.

அப்போது 2 மாவட்ட தலைவர்கள் மட்டுமே இருந்தார்கள் இப்போது ஒரு மாவட்டத்திற்கு 16 தலைவர்கள் இருக்கிறார்கள். 16 போஸ்டர் கூட இல்லை அப்படி விஜய்யின் மக்கள் இயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வலு இழந்து கொண்டே போகிறது.

காசுக்காக இருக்குறவங்க மட்டும் அங்கே இருக்கிறார்கள் ஆனால் விஜய்க்கு அந்த இயக்கம் ஏதோ பெருசா வளர்ந்ததா நினைப்பு . ஏன் இப்படி நடக்குதுன்னு விஜய் தானே சிந்திக்கணும். ஏன் இப்படி வலு இழந்து போச்சு அப்படிங்கறத விஜய் யோசிக்கணும் விஜய் அனைத்தையும் விரைவில் புரிந்து கொள்வார்.

ஒரு நேரத்துல விஜய் மக்கள் இயக்கத்திற்கு இருந்த பவர் ஒரு அரசியல் கட்சிக்குள் இருந்த பவருக்கு சமமாக இருந்தது. உங்களுக்கே தெரியும் ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் எத்தனை கட்சிகள் எங்களை வந்து சந்திச்சாங்கன்னு என்று SAC பேசி உள்ளார்.

SAC அவர்களின் பேச்சைக் கேட்ட நெட்டிசன்கள் நேற்று விஜய் சதாபிஷேக விழாவிற்கு கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணமாக இருக்குமோ என்று கூறி வருகிறார்கள். SAC அரசியல் ஆசையை விஜய் மீது திணித்து அதனால் விஜய் பல பிரச்சனைகளை சந்தித்து அனைவரும் அறிந்த ஒன்று. SAC அவர்களுக்கு விஜய் முன்பெல்லாம் தன்னை கேட்டு முடிவெடுப்பார் இப்பொது தானே முடிவெடுக்கிறார் என்ற வருத்தம் இன்றும் உள்ளது.

விஜய் கட்டுக்கோப்பாக தனது மக்கள் இயக்கத்தை கொண்டு செல்லும் நேரத்தில் விஜய் மக்கள் இயக்கம் வலு இழந்து விட்டதாக விஜயின் தந்தை பேசி இருப்பது பெரும் அதிர்ச்சியை விஜய் ரசிகர்களிடம் ஏற்படுத்தி உள்ளது.

செய்தி மீம்ஸ்:

Exit mobile version