நடிகை சில்க் ஸ்மிதா டிசம்பர் இரண்டாம் தேதி 1960ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தவர். கரூர் அவருடைய பூர்வீக ஊர் என்பதால் தன்னை தமிழச்சி என்று இன்று சொல்லிக்கொள்வார்.
குடும்ப வறுமையால் சினிமா நடிகர்களுக்கு மேக் ஆப் போடும் பெண்ணாக இருந்த சில்க்கை வினுச்சக்கரவர்த்தி அவர்கள் வண்டி சக்கரம் என்ற படத்தில் சில்க் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.
ஒரு நேரத்தில் சில்க் ஸ்மிதா தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தார் சில்க் ஸ்மிதா அவர்கள் ரஜினி கமல் பாக்யராஜ் போன்ற அந்த நேரத்தில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து இருந்தார். சில்க் ஸ்மிதாவின் நடனம் மற்றும் கவர்ச்சி ரசிகர்களை ஈர்த்தது.
சினிமாவில் கொடிகட்டி பறந்த சில்க்கை பலர் திருமணம் செய்து கொள்கிறேன் காதலிக்கிறேன் என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் கூறி பயன்படுத்திக் கொண்டார்கள். சில்க் ஸ்மிதா தனது தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார் அந்த கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த கடிதத்தில் சினிமா இண்டஸ்ட்ரியில் இன்னைக்கு பெரிய நடிகையாக வந்த பிறகும் கூட எனக்கு நிம்மதியே இல்லை . நான் ஒரு நடிகை ஆவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது எனக்குத்தான் தெரியும் யாருமே என்னை நேசிக்கவில்லை நான் தான் அனைவரையும் நேசித்தேன். என்னுடைய குடும்பத்தை ரொம்ப நேசித்தேன்.
பாபு என்று அழைக்கப்படுகிற ராதாகிருஷ்ணன் என்பவர் தான் எனக்கு கொஞ்ச நஞ்ச அன்பையும் காட்டினார் எல்லாருமே என்னுடைய வேலையை பயன்படுத்திக்கொண்டு பெரிய ஆளாக ஆனாங்க. எனக்கு நிம்மதியே இல்லை அதனால் தான் என்னமோ தெரியல மரணம் என சீக்கிரமாக அழைக்குது நான் நிறைய பேருக்கு நல்லது மட்டும் தான் செஞ்சிருக்க.
ஏன் என்னோட வாழ்க்கை இப்படி இருக்கு கடவுளே இது எல்லாத்துக்கும் நியாயம் இல்லையா நான் சம்பாதித்து இதுல பாதி பாபுக்கு கொடுக்கிறேன் நான் அவரை உண்மையாக நேசித்தேன் நான் யாருக்கும் எந்த துரோகமும் செய்யமாட்டேன். பாபு என்ன நல்லா பார்த்து பாரு என்று நினைச்சேன் ஆனால் அவரே என்னை ஏமாற்றி விட்டார்.
நிறைய பேரு என்னுடைய உடம்பை பயன்படுத்தி இருக்காங்க என்னுடைய வேலையை பயன்படுத்திக்கொண்டு பெரிய ஆளா ஆக்கி இருக்காங்க. நான் நன்றி சொல்ல விரும்பும் நபர் பாபு அவர்கள் தான். கடந்த 5 வருஷமா நன்றாக பார்த்து விட்டார்.
பாபு அவர்கள் கூறியதெல்லாம் வெறும் வார்த்தை மட்டும்தான் நான் மிகவும் உடைந்து போய் விட்டேன் அப்புறம் என்ன பேசுவது என்ன எழுதுவது என்று எனக்குத் தெரியல என்று தற்கொலைக்கு முன்பு சில்க்ஸ்மிதா கடிதம் ஒன்றை எழுதி வைத்து இறந்து விட்டார்