Home NEWS மக்களுக்காக தனது சொத்தை அடமானம் வைத்த பிரபல நடிகருக்கு கோவில் கட்டிய கிராம மக்கள்..!!! மனிதநேயத்திற்கு...

மக்களுக்காக தனது சொத்தை அடமானம் வைத்த பிரபல நடிகருக்கு கோவில் கட்டிய கிராம மக்கள்..!!! மனிதநேயத்திற்கு கிடைத்த பரிசு.

சோனு சூட் ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் படங்களில் நடித்தோம், கோடிக்கணக்கில் பணங்களை சம்பாதித்தோம் என்று தன் வேலையை மட்டும் பார்த்துக் கொள்ளாமல் மக்களுக்கு கஷ்டமான நேரத்தில் கை கொடுக்க வேண்டும் என்று நினைத்த இந்த ஹீரோவிற்கு ஒரு கிராமத்து மக்கள் கோவில் ஒன்றை கட்டி உள்ளனர்.

கொரோனா நேரத்தில் பல இடங்களில் நடுத்தர மக்கள் மற்றும் குடும்பத்தினர் பலரும் வேலை இன்றி உணவிற்கே கஷ்டப்பட நேரத்தில் 28 மாநிலங்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளார் சோனு சூட். தன்னுடைய 10 கோடி சொத்தை அடமானம் வைத்து மக்களுக்கு உதவி செய்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

தெரிந்தவர்களே பணம் கொடுத்து உதவ யோசிக்கும் இந்த காலத்தில் ஒரு நடிகர் மக்கள் மீது அக்கறை கொண்டு உதவி உள்ளார் என்பது பெரிய விஷயம்.

பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி மாட்டிக்கொண்டிருந்த வெளிமாநில தொழிலார்களை சொந்த ஊருக்கு தன்னுடைய செலவில் அனுப்பி வைத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் சில மக்களுக்கு வேலை வாய்ப்பையும் அமைத்துக் கொடுத்து உதவியிருக்கிறார்.

மக்கள் மீது அக்கறை கொண்டு கொரோனா நேரத்தில் இவர் செய்த மனிதநேயமிக்க பணியை கௌரவம் செய்ய முடிவு செய்த தெலுங்கானா மக்கள் தற்பொழுது கோவில் ஒன்றை கட்டி உள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தில் இருக்கும் சித்திப்பெட் மாவட்டத்தில் துப்ப தண்டா என்ற கிராமத்தில் இவருக்கு கோவில் ஒன்றை கட்டி ஆரத்தி எடுத்து அவர்களின் அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இவர் படங்களில் வில்லனாக நடித்தாலும் செயலால் உண்மையான ஹீரோ ஆகிட்டார். வாழ்த்துக்கள் சோனு.

Exit mobile version