தொகுப்பாளினி அர்ச்சனா சன் டிவி காமெடி டைம் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமான அர்ச்சனா தனது திருமணத்துக்கு பின் சற்று சின்னத்திரையை விட்டு விலகி இருந்தார்.
மறுபடியும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த அர்ச்சனா ஜீ தமிழில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். தனது மகளுடன் சேர்ந்து ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் அர்ச்சனா.
விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி வழியாக பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக சென்றார். அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததும் சிறப்பாக விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர் ஆனால் அதற்கு மாறாக அர்ச்சனா அன்பு GANG என்று ஒரு அணியை உருவாக்கி அதில் ரியோ, கேப்ரில்லா அறந்தாங்கி நிஷா என்று இவர்களுடன் மட்டும் நன்றாக பழகி வந்தார்.
அன்பு தான் வெல்லும் என்றெல்லாம் அடிக்கடி டயலாக் விட்ட அர்ச்சனா. நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த எவிக்ஷன்னில் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். ரசிகர்களும் அர்ச்சனா ஒருவழியாக பிக்பாஸ் வீட்டை விட்டு வந்தால் போதும் என்று காத்திருந்தார்கள்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அர்ச்சனா தனது சொந்த வீட்டுக்கு என்ட்ரி கொடுத்துள்ளார். தனது அம்மாவிற்கு மாலை போட்டு கட்டி அணைத்து உற்சாக வரவேற்பை கொடுத்தார் அவரது மகள். தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.