சூர்யா திறமையான நடிகர் அற்புதமாக நடிப்பை வெளிப்படுத்தும் மனிதர். சில காலங்களாக சூர்யா கமர்சியல் படங்களில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தி வந்தார். பழையபடி சூர்யா கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை எப்போது எடுத்து நடிப்பார் என்று அவருடைய ரசிகர்கள் காத்திருந்தனர்.
சூர்யாவின் நடிப்புக்கு தீனி போடும் படி அமைந்தது தான் சூரரைப்போற்று திரைப்படம். சூரரைப்போற்று திரைப்படத்தில் கோபிநாத் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருந்தார்.
சில எமோஷனல் காட்சிகளில் சூர்யா படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தார் அந்த அளவிற்கு தனது மெச்சூரிட்டியான நடிப்பால் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தார்.
சமீபத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படமும் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்று சூர்யா கதையின் நாயகனாக மறுபடியும் மாறிவிட்டார் என்று பெரிய நம்பிக்கை கொடுத்தது.
இன்று சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஐந்து பிரிவுகளில் தேசிய விருது கிடைத்துள்ளது சூர்யாவிற்கு சிறந்த நடிகர்கள் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரபல விமர்சகர் மற்றும் பத்திரிகையாளரான தொலைபேசி புகழ் பிஸ்மி அவர்கள் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் நடிகர் சூர்யாவின் மேனேஜர் தங்கதுரை தேசிய திரைப்பட விருது தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருப்பதால் சூர்யாவுக்கு அவரது படத்துக்கு விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று முன்பே அவர் பதிவிட்டது சுற்றிக் காட்டினார்.
சூர்யாவின் மேனேஜர் தங்கத்துரை அவர்கள் தேசிய திரைப்பட விருது தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்ததால் மட்டும் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு விருது கிடைக்கவில்லை.
சூர்யாவின் அபார நடிப்பும் படத்தில் நடித்திருந்த ஒவ்வொருத்தரின் பங்கும் முக்கியமாக இயக்குனர் மற்றும் இசையமைப்பாளரின் கடின உழைப்பும் தான் இந்த படத்திற்கு பெருமையை சேர்த்துள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஒருவர் சாதித்தால் தட்டிக்கொடுங்கள் குட்டிவிடாதீர்கள் என்று சூர்யாவின் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.