ராஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமாவில் விஜய் தேவர் கொண்டா நடிப்பில் வெளிவந்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குறிப்பாக அந்தப் படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் படமாக அமைந்ததால் ராஷ்மிகா மந்தனா விற்கு பெரிய பிரபலத்தை தேடிக் கொடுத்தது.
தெலுங்குவில் பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் வம்சி அவர்கள் தான் விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறார். தளபதி விஜயின் வாரிசு படத்திற்கு முதலில் பூஜாவை தான் அணுகினார்கள் படக்குழு ஆனால் அவருடைய கால்ஷீட் இல்லாத காரணத்தினால் ராஷ்மிகாவை அணுகியுள்ளார்கள்.
அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த ராஷ்மிகா தனக்கென்று ஒரு அசைக்கமுடியாத மார்க்கெட்டை தெலுகுவில் உருவாக்கி கொண்டார்.
விஜய்யின் தீவிர ரசிகையான ராஷ்மிகா உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். தற்பொழுது வாரிசு ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் ராஷ்மிகா பற்றி செய்திகள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது அது என்னவென்றால் ராஷ்மிகா தான் சூட்டிங் செல்லும்போது தனது செல்ல பிராணி AURA என்ற நாயை அழைத்து வருவதாகவும் தன்னுடன் சேர்த்து அந்த செல்லப்பிராணிகள் FLIGHT டிக்கெட் தயாரிப்பாளரை போட சொல்வதாகவும் செய்திகள் சில நாட்களாக வலம் வந்து கொண்டிருந்தது.
இந்த விஷயத்தை ராஷ்மிகா தரப்புக்கு கொண்டு சென்றார்கள் அப்போது இதனைப் பார்த்த ராஷ்மிகா சிரித்துக்கொண்டே என்னுடைய செல்லப்பிராணி AURA என்னுடன் பயணிக்க நீங்கள் விரும்புகிறீர்கள் ஆனால் அவள் என்னுடன் பயணிக்க விரும்பவில்லை. AURA ஹைதராபாத்தில் செம ஜாலியாக இருக்கிறாள் என்று கூறிய ராஷ்மிகா உங்களுடைய அக்கறைக்கு நன்றி என்று கூறியிருந்தார்.
வேண்டுமென்றே ராஷ்மிகா மார்க்கெட்டை குறைப்பதற்காக சிலர் கிளப்பி விடும் புரளி தான் இது என்கிறார்கள் ராஷ்மிகா தரப்பு.