இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அன்றிலிருந்து இன்றுவரை இளைஞர்களின் FAVOURITE இசையமைப்பாளர் காலத்திற்கு ஏற்றது போல தனது இசையை மெருகேற்றிக் கொண்டே செல்லும் இசையமைப்பாளர்களில் ஏ ஆர் ரகுமான் அவர்களும் ஒருவர்.
சமீபத்தில் தனது மூத்த மகள் கதீஜா அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தார். மகளின் திருமண வரவேற்பு ஏ ஆர் ரகுமான் அவர்களின் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நடந்தது. இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவ்வப்போது தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தர்காவிற்கு செல்வது வழக்கமாக வைத்திருப்பார். நாகை வரும் பொது நாகூர் தர்காவிற்கு சென்று வழிபட்டு வரும் அவர் தற்பொழுது ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவுக்கு தனது மனைவி சாய்ராபானுவோடு வழிபாடு செய்ய சென்றிருந்தார்.
ஏ ஆர் ரகுமான் அஜ்மீர் தர்காவிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம் என்றாலும் தனது மனைவியுடன் சென்று வழிபட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அத்துடன் ஜோதா அக்பர் க்வாஜா எந்தன் க்வாஜா பாடலில் இடம்பெற்ற வரிகளான இருள் நீக்கும் அன்பின் பேரொளியே நிழலாகும் கருணைக்கடலே உன் பாதம் சேரும் வரை வாழ்க்கை என்பது ஒரு கனவு தானே என்று வரியையும் பதிவிட்டுள்ளார்.