Home NEWS மது பிரியர்கள் மற்றும் அசைவ பிரியர்களுக்காகவே மெகா தடுப்பூசி முகம் நாள் மாற்றம்…!!!

மது பிரியர்கள் மற்றும் அசைவ பிரியர்களுக்காகவே மெகா தடுப்பூசி முகம் நாள் மாற்றம்…!!!

vaccine

பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நிருபர்களிடம் அளித்த பேட்டி நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் பிறப்பிற்குப் பிறகு பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் பேசி பெற்றோர்களை ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு மருத்துவ சேவை செய்யப் படும். தமிழகத்தில் இரண்டு பல் மருத்துவக் கல்லூரிகள் அரசின் சார்பில் இயங்கி வருகிறது விருதுநகர், புதுக்கோட்டையில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி கிடைத்துள்ளது.

விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் தமிழக அரசின் தடுப்பூசி போடும் பணியை பாராட்டி ஒன்றிய அரசு தடுப்பூசிகளை விரைந்து அளித்துள்ளது. அந்த வகையில் இப்போது 53,61,729 தடுப்பூசிகள் நம்மிடம் உள்ளது. தடுப்பூசி முகாம் பெரிய அளவில் விழிப்புணர்வு பெற்று உள்ளது. இதனால் பல லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

இந்த வாரம் ஆறாவது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது 50 ஆயிரம் முகாம்களின் மூலம் இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடத்தப்பட உள்ளது. பொறுத்தவரையில் 11 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இந்த வாரம் நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாமில் 30,42,550 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். 67% பேர் முதலாவது தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர்.

எனவே பொதுமக்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். வரும் புதன்கிழமை தலைமைச் செயலாளர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் இதுகுறித்து கூட்டம் நடைபெற உள்ளது. எல்லா ஊராட்சிகளிலும் 100% தடுப்பூசி செலுத்த வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் மட்டும் 2500 முகாம்கள் நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மது பிரியர்கள், அசைவப் பிரியர்கள் வேண்டுகோளுக்கிணங்க சனிக்கிழமையன்று தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. பெரும்பாலானோர் ஞாயிற்றுக் கிழமைகளில் அசைவம் சமைத்து சாப்பிடுவது மற்றும் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளதால் அன்று தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அச்சப்படுகின்றனர். அதனால் சனிக்கிழமை அன்று தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version