நடிகர் செந்தில் என்றாலே நம் ஞாபகத்துக்கு வருவது வாழைப்பழ காமெடி தான. வாழைப்பழ காமெடியை மூலம் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த இவரை எப்படி மறக்க முடியும். கரகாட்டக்காரன் என்ற படத்தில் இடம் பெற்று இருந்த அந்த வாழைப்பழ காமெடி செந்தில் கவுண்டமணி செய்யும் நகைச்சுவை நினைத்துப் பார்த்தால் இன்றும் பலருக்கு சிரிப்பு வரும்.
கிட்டத்திட்ட செந்தில் அவர்களும் கவுண்டமணி அவர்களும் 250 திரைப்படங்களுக்கு மேல் ஒன்றாகவே நடித்துள்ளனர் இதுவே ஒரு பெரிய சாதனை ஒரு சில படங்கள் ஒன்றாக பணிபுரிந்தால் நகைச்சுவை நடிகர்களுக்கு ஈகோ வரும் இந்த காலத்தில் 250 திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள் என்பது பெரிய ஆச்சரியம்.
செந்தில் அவர்கள் கொடைக்கானலில் சூட்டிங் நடைபெற்றபோது தவறி விழுந்து முதுகெலும்பில் பலமாக அடிபட்டு ஏழு வருடங்கள் ஓய்வில் இருந்தார். ஒரு பேட்டியில் கூட உங்களுடைய நெருங்கிய நண்பர் யார் என்று கேட்டதற்கு சற்றும் யோசிக்காமல் சிரித்துக்கொண்டே என்னுடைய மனைவி கலைச்செல்வி தான் என்று கூறியிருந்தார். நான் ஏழு வருஷம் ஓய்வுல இருந்தப்போ என்ன ஒரு குழந்தை போல பாத்துகிட்டார் இன்று அவருடைய மனைவியை பெருமைப்படுத்தினார் மனிதர்.
செந்தில் அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள் ஒருவர் பெயர் மணிகண்டபிரபு மற்றொருவர் பெயர் ஹேமச்சந்திர பிரபு. இதில் மணிகண்ட பிரபு அவர்கள் தன்னுடைய தந்தை செந்தில் அவர்களின் பெயரில் செந்தில் டென்டல் கிளினிக் என்று சாலிகிராமத்தில் ஒரு மருத்துவமனை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.
மணிகண்ட பிரபு அவர்கள் தனது அப்பா செந்திலுடன் படத்தில் நடிக்கவேண்டும் என்பது. அவருடைய நீண்ட நாள் ஆசை தற்பொழுது நிறைவேறி உள்ளது. தற்பொழுது அன்பு தந்தை செந்திலுடன் மணிகண்ட பிரபு அவர்கள் தடை உடை என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் பாபி சிம்மா ஹீரோவாக நடிக்கிறார்.