விருதுநகர் மாவட்டம் சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட தேவர்குளம் பஞ்சாயத்து பகுதியை சேர்ந்தவர் தான் கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி சர்மிளா. கார்த்திகேயன் என்பவருக்கு வயது 35 ஆகிறது இவர் சில நாட்களுக்கு முன்பு சிவகாசி தாலுகா அலுவலகத்திற்கு சென்று எங்களுக்கு ஜாதி மதம் அற்றவர்கள் என்று சான்றிதழ் வழங்க கோரி விண்ணப்பம் அளித்துள்ளார்கள்.
இதுவரை யாரும் இது போன்று சான்றிதழ் கொடுக்கவில்லை இந்தியாவிலேயே 7பேர் ஜாதி மதம் அற்றவர்கள் என சான்றிதழ் பெற்றுள்ளார்கள் குறிப்பாக அதிலும் ௬ பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று கார்த்திகேயன் ஆதாரத்தை கொடுத்துள்ளார்.
அதன்பின் சில நாட்கள் கழித்து கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி சர்மிளாவை விசாரித்த அதிகாரிகள் ஜாதி மதம் அற்றவர்கள் என்று சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
இது குறித்து சான்றிதழ் வாங்கிய கார்த்திகேயன் கூறியது எனது சொந்த ஊர் சிவகாசி சில வருடங்களுக்கு முன்பு நான் ஜாதி மதம் அற்றவர் என்று சான்றிதழ் கேட்டு மனு ஒன்றை கொடுத்து இருந்தேன் அந்த நேரத்தில் அதிகாரிகள் வழங்க மறுத்துவிட்டனர். அதன் பின் இணையத்தில் அதற்கு தேவையான ஆவணங்களை சேகரிக்கத் தொடங்கினேன் 2018 ஆம் ஆண்டு சினேகா என்பவர் ஜாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழை பெற்றிருந்தார் அதனை ஆதாரமாக வைத்துக்கொண்டு ஜாதி மதம் அற்றவர்கள் என்று எனக்கும் என் மனைவிக்கும் சான்றிதழ் வேண்டும் என்று விண்ணப்பித்தேன் நான் சுயதொழில் செய்து வருகிறேன் எனது மனைவி உதவி பேராசிரியராக இருக்கிறார்.
தற்பொழுது எங்கள் இருவருக்கும் ஜாதி மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழ் கிடைத்துவிட்டது. என்னுடைய மூத்த மகன் நேசன் யுகேஜி படித்து வருகிறார் அவருக்கும் ஜாதி மதம் அற்றவர் என சான்றிதழ் கேட்டுள்ளேன். இரண்டாவது மகன் கரிகாலன் அவர்களுக்கு இரண்டு வயது தான் ஆகிறது விரைவில் அவனுக்கும் ஜாதி மதம் வேண்டாம் என்ற சான்றிதழ் விண்ணப்பிப்பேன் என்று கூறியுள்ளார். இந்த தம்பதியினர் செயலுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து. வருகிறது.