Home NEWS திடீர் மருத்துவமனையில் அனுமதி நள்ளிரவில் 3மணிக்கு விஜயகாந்த்துக்கு என்ன ஆனது..!!! தற்பொழுது கேப்டன் எப்படி...

திடீர் மருத்துவமனையில் அனுமதி நள்ளிரவில் 3மணிக்கு விஜயகாந்த்துக்கு என்ன ஆனது..!!! தற்பொழுது கேப்டன் எப்படி உள்ளார் தெரியுமா?

vijayakanth health condition

விஜயகாந்த் நல்ல நடிகர் என்பதை நிரூபித்துக் காட்டி தன்னை ஒரு நல்ல அரசியல் தலைவர் என்று நிரூபிக்க அரசியல் களத்தில் இறங்கியவர். தேமுதிக கட்சி என்று ஆரம்பித்து அதனை கட்டுக்கோப்பாக எடுத்து சென்ற விஜயகாந்த் அரசியலில் தன்னுடைய பலத்தை காட்டி பலரையும் பிரமிக்க வைத்தார். மக்களும் விஜயகாந்திற்கு அதிக அளவில் ஆதரவும் கொடுத்தனர்.

தேமுதிக கட்சியின் மூலமாக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்த விஜயகாந்துக்கு சில வருடங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிரமப்பட்டு வருகிறார். வெளிநாடுகள் சென்று மருத்துவ சிகிச்சை பார்த்து வருகிறார்.

சென்னையில் மியாட் மருத்துவமனையில் உடல் பரிசோதனை அடிக்கடி செய்து கொள்ளும் விஜயகாந்த் இன்று அதிகாலை 3 மணி அளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

தேமுதிக தலைமை கழகத்தில் இருந்து வந்த அறிக்கை ஒன்றில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது கேப்டன் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது மேலும் சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார் எனவே பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்று அறிக்கை வழியாக கூறியுள்ளனர்.

3:00 மணி அளவில் இருந்த நிலை தற்போது இல்லை நலமுடன் விஜயகாந்த் இருக்கிறார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

Exit mobile version