Home NEWS சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்…!!! விவசாயிகளே தாமதிக்காதீர்.

சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்…!!! விவசாயிகளே தாமதிக்காதீர்.

paddy

விவசாயிகள் நடப்பு 2021-2022 ஆம் ஆண்டில் சம்பா நெற்பயிரை பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இன்று காப்பீடு செய்ய வேண்டும். நவம்பர் 15ஆம் தேதி தான் கடைசி நாள் என வேளாண்மை மற்றும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வேளாண்மை மற்றும் நலத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2021 – 2022 ஆம் ஆண்டு சம்பா பருவ பயிர்களுக்கான காப்பீட்டு பொது சேவை மையங்கள் தொடங்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதுவரை 20.95 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்ட சுமார் 10 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில் சம்பா பயிர் காப்பீடு தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 15 அன்று முடிவடைகிறது.

எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு என்று 15ஆம் தேதி பொது சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் முழுவீச்சில் இயங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை சம்பா பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் நவம்பர் 15ஆம் தேதி பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை இத்திட்டத்தில் பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Exit mobile version