Home NEWS நடிகையை பாலியல் தொழிலுக்கு அழைக்கும் ரவுடி பேபி சூர்யா…!!! வெளியான ஆடியோ…!!!

நடிகையை பாலியல் தொழிலுக்கு அழைக்கும் ரவுடி பேபி சூர்யா…!!! வெளியான ஆடியோ…!!!

நடிகையை பாலியல் தொழிலுக்கு அலைக்கும் டிக்டாக்கில் பிரபலமான சூர்யா என்பவரின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் நடிகை ஒரு மணி நேரத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வாங்குவதாக கூறுவதால் அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில் திருப்பூரை சேர்ந்த ரவுடி பேபி சூர்யா என்பவர் டிக்டாக்கில் மிகவும் பிரபலம். அது போல பலரை வம்புக்கு இழுப்பதும் அவருக்கு கை வந்த கலை. இந்நிலையில் இவர் டிக் டாக் பிரபலமாக வேண்டும் என்பதற்காக ஆபாசமாக பேசவும், ஃபேஷன் என்ற பெயரில் அரைகுறை ஆடை அணிந்து தோன்றுவது வழக்கமாக வைத்துள்ளார்.

எனவே இவரை அதிகமானவர்கள் டிக் டாக்கில் பின்தொடர்ந்தனர். இதற்கிடையில் இந்தியாவில் டிக்டாக் ஆப் தடை செய்யப்பட்டது. தற்போது யூடியூபில் கலக்கி வருகிறார் இந்நிலையில் நடிகை இலக்கியா என்பவருடன் டிக் டாக் ரவுடி பேபி சூர்யா பேசும் ஆடியோவை ஒரு வாலிபர் வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் சூர்யாதான் இலக்கிய முதலில் தொடர்புகொண்டு நான் திருப்பூர் ரவுடி பேபி சூர்யா பேசுவதாக கூறினார். நான் முக்கியமான விஷயமாக பேச வேண்டும். எப்போதுமே நேர்மையாக தான் பேசுவேன். என்னுடன் பேசவே விருப்பம் இல்லை என்றால் சொல்லிவிடு நான் அதைத்தான் விரும்புகிறேன் என்று சூர்யா கூறினார். அதற்கு இலக்கியம் நான் தற்போது ஷூட்டிங்கில் இருப்பதால் பேச முடியவில்லை என்று கூறினார்.

ஆனால் விடாமல் தொடர்ந்து பேசும் சூர்யா முக்கியமான விஷயம் சொல்கிறேன். சிங்கப்பூர் போகிறேன் நீ வர முடியுமா என்று கேட்டார்கள் என்று கூறினார். அதற்கு இலக்கியா சிங்கப்பூர் எதற்கு டான்ஸ் நிகழ்ச்சிக்காக என்றார். நான் டான்ஸ் இல்லை சர்வீசுக்கு தான் (பாலியல்தொழில்) என்று சூர்யா பதிலளித்தார். மேலும் உனக்கு எவ்வளவு வேண்டும் மாத சம்பளம் தான். நான் சில மாதங்களுக்கு முன்னர் சிங்கப்பூர் சென்று வந்தேன். என் ஓனர் (மாமா தான்) தெரிந்தவர். எனக்கு மாமா தான் அத்தை மகன் நல்லவர். நான் ஒரு நாளைக்கு 6 வாடிக்கையாளர்களை சந்திப்பேன்.

உனக்கு எவ்வளவு வேணும்னு சொல்லு மாச சம்பளமா சொல்லு என்கிறார். அதற்கு இலக்கிய நான் சென்னையிலேயே ஒரு ஆளுக்கு இரண்டு மணி நேரம் தங்குவதற்கு ஒரு லட்சம் வாங்குகிறேன் என்றார். அதற்கு சூர்யா சரி டி. உனக்கு எவ்வளவு வேண்டும் என்றபோது மாதம் 3 லட்சம் வீதம் 2 மாதத்திற்கு 6 லட்சம் கேட்கிறார். வேலை (பாலியல்தொழில்) இல்லாவிட்டாலும் பணம் தருவார்களா என்ற போது வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பணம் கொடுப்பார்கள். 15 நாளைக்கு ஒரு முறை பணம் கொடுப்பார்கள். செலவு முழுவதும் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறுகிறார். இந்த ஆடியோ வெளியானது முதல் சமூக வலைத்தளங்களில் கடும் மோதல் எழுந்துள்ளது. ஆடியோவை வெளியிட்ட வாலிபர் தனது உயிருக்கு ஆபத்து என்று கூறியுள்ளார். இதனால் பாலியல் தொழிலுக்கு சூர்யா என்ற பெண் அழைத்த ஆடியோ வெளியானதை வைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் யூட்யூப் மற்றும் இணைய தளங்களை பயன்படுத்தி ஆபாசமாகவும் மோதலிலும் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரவுடி பேபி சூர்யாவிடம் இதைப்பற்றி கேட்டபோது பாலியல் குறித்த ஆடியோ வெளியானது குறித்து இது தன் குரல் இல்லை என்று மறுத்த சூர்யா ஒரு வீடியோ வெளியிட்டார்.

அதில் நான் தனியாக பேசியதும் இலக்கிய தனியாக பேசியதையும் ஒன்றிணைத்து உள்ளனர் என்று குறிப்பிட்டு இருந்தார். பின்னர் மற்றொரு வீடியோவில் அவர் விரும்பி தான் என்னுடன் பேசினார் நானும் விரும்பி தான் பேசினேன். யாருடைய விருப்பம் இல்லாமல் தப்பும் செய்யலையே விரும்பி தான் செய்கிறோம். அதைத்தான் பேசினேன் என்று குறிப்பிட்டுள்ளனர் நான் பேசியது உண்மை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version