Home NEWS தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீடியோ வெளியிட்டு போலீசையே திக்குமுக்காட வைத்த டிக் டாக் சூர்யா தேவி…!!!

தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீடியோ வெளியிட்டு போலீசையே திக்குமுக்காட வைத்த டிக் டாக் சூர்யா தேவி…!!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை காந்திநகரில் மகளுடன் வசிப்பவர் சூர்யா தேவி (35) அரசியல், சினிமா நடிகைகள் மற்றும் டிக் டாக் பிரபலங்களை விமர்சித்து சமூகவலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு அதன் மூலம் விளம்பரம் தேடிக்கொள்வது இவரது வழக்கம்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சியை சேர்ந்த ரவுடி பேபி சூர்யாவின் ஆனால் மதுரை சுப்பிரமணியபுரத்தில் சேர்ந்த என்ற சிக்கா என்ற சிக்கந்தர் உடன் தகராறில் ஈடுபட்டு அவரை செருப்பால் அடிக்கும் வீடியோவை சமூக வலைத் தளங்களில் பதிவு தான் இது தொடர்பாக சூர்யா தேவி மீது மதுரை சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக அவரிடம் விசாரிக்க மதுரை போலீசார் சில நாட்களுக்கு முன் மணப்பாறை வந்திருந்தார். அப்போது சூர்யா தேவியின் வீடு பூட்டி இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதுரை போலீஸ் கமிஷனருக்கு ஒரு வீடியோ அனுப்பிய சூர்யா தேவி அதில் நான் தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்தார்.

இதுகுறித்து மதுரை மாநகர கமிஷனர் மணப்பாறை டிஎஸ்பி பிருந்தாவுக்கு தகவல் அளித்ததன் பேரில் மணப்பாறை போலீசார் நள்ளிரவு 12 மணி அளவில் காந்திநகரில் உள்ள சூர்யா தேவி வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டின் கதவு உட்புறம் பூட்டப்பட்டிருந்தது நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மணப்பாறை தீயணைப்புத் துறையினரை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

ஆனால் அங்கு மின் விசிறியில் தூக்கு மாட்டிக் கொள்வது போல் கட்டி விட்டு போலீசார் கதவை உடைத்து வந்தது கூட தெரியாமல் சொல்லி கட்டிலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரை எழுப்பி அறிவுரை கூறி போலீசார் சூர்யா தேவியையும் அவரது மகளையும் பக்கத்து தெருவில் இருந்த அவரது தாத்தா சாமியுடன் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதனிடையே சூர்யா தேவி மீதான புகாரில் நடவடிக்கை எடுக்கக்கோரி சிக்கந்தர் மற்றும் அவரது தோழியான டிக் டாக் பிரபலம் சூர்யா ஆகிய இருவரும் நேற்று மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசில் மீண்டும் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

Exit mobile version