Home NEWS விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமியை கடித்து குதறிய நாய்…!!! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி.

விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமியை கடித்து குதறிய நாய்…!!! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி.

dog

நௌலம்பூர் சாலையில் விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுமியை வீட்டு வளர்ப்பு நாய் கடித்து குதறிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. இச்சம்பவத்தில் வளர்ப்பு நாயின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை நௌலம்பூர் ஸ்ரீராம் நகர் பிரதான சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி அன்று இந்த குடியிருப்பில் வசித்து வரும் விஜயா என்கின்ற விஜயலட்சுமி 43 என்பவர் தனது வளர்ப்பு நாய் ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை குடியிருப்பின் வெளியே நடை பயிற்சிக்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை கண்ட நாய் திடீரென உரிமையாளரின் கைப்பிடியில் இருந்து விடுபட்டு குரைத்த படி ஓடியது. நாய் வேகமாக தன்னை நெருங்கி அருகே ஓடி வருவதைக் கண்ட சிறுமி அலறியடித்து ஓட்டம் பிடித்தார்.

சிறுமி ஓடிய போது அவரை துரத்தி சென்ற நாய் சிறுமியை விரட்டி சென்று கை, கால், முதுகு ஆகிய பகுதிகளில் கொடூரமாக கடித்து குதறியது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து நாயை விரட்டி அடித்து சிறுமியை மீட்டனர். பின்னர் சிறுமியை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக சிறுமியின் தந்தை வைரவன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நௌலம்பூர் புகாரின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீசார் வளர்ப்பு நாயின் உரிமையாளரான விஜயலட்சுமி கைது செய்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் ஜாமீனில் விடுவித்தார். மேலும் நௌலம்பூர் போலீசார் நாயின் உரிமையாளர் விஜயலட்சுமி இடம் இனி இதுபோன்ற தவறு நடக்காது என்பதற்கு உறுதி அளிக்கும் வகையில் அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் வளர்ப்பு நாய் 9 வயது சிறுமியை கடத்தி சென்ற கடிக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அதில் உரிமையாளரின் கையிலிருந்து விடுபட்டு சிறுமியை கடத்தி சென்ற கிடைக்கும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version