தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய் என்றால் அது மிகையாகாது. அதுபோல தளபதி விஜய்க்கு என்று மாபெரும் ரசிகர் கூட்டம் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் உள்ளது. இவர் படங்கள் வெளிவர போகிறது என்றால் அது ரசிகர்களுக்கு தீபாவளி, பொங்கல் போன்று இருக்கும்.
தற்போது விஜய் நடித்து வெளிவர உள்ள வாரிசு படம் பொங்கலுக்கு ரசிகர்களுக்கு விருந்தாக திரையில் வரப்போகிறது. இந்நிலையில் தல அஜித் படமான துணிவு படமும் வெளிவர போகிறது. இந்த இரு படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இரு படங்களுக்கும் தியேட்டர் விநியோகிப்பதிலும் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் வாரிசு பட வெளியீட்டை ஒட்டி ரசிகர்களை இரண்டாவது முறையாக பனையூரில் நடிகர் விஜய் சந்தித்தார். அப்போது மாற்றுத்திறனாளி ஒருவரை விஜய் மேடையில் தூக்கி வருவது போல புகைப்படங்கள் வைரல் ஆகின.
படம் நன்றாக ஓடவேண்டும் என்று விளம்பரத்திற்காக இப்படியெல்லாம் விஜய் செய்கிறார் என நெட்டிசன்கள் ஒருபக்கம் ட்ரோல் செய்து வருகின்றனர். தற்போது அந்த மாற்றுத்திறனாளி அளித்த பேட்டி ஒன்றில், “என்னால் நடந்து வர முடியவில்லை என்னை சிலர் தூக்கிக்கொண்டு வந்தனர். அதை பார்த்த தளபதி விஜய் மேலிருந்து கீழே இறங்கி ஓடி வந்து அவரே என்னை தூக்கி சென்றார், அது மட்டும் இல்லாமல் உங்களுக்கு வேறு ஏதாவது உதவி வேண்டுமா என்றும் கேட்டார்” என கூறியுள்ளார். தற்போது இந்த பேட்டி விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.