Home CINEMA NEWS 22 வருடங்களுக்கு பின் மீண்டும் திரையரங்கில் வெளியான விஜய் படம்..!!! படத்தின் ரெஸ்பான்ஸை கண்டு வியந்து...

22 வருடங்களுக்கு பின் மீண்டும் திரையரங்கில் வெளியான விஜய் படம்..!!! படத்தின் ரெஸ்பான்ஸை கண்டு வியந்து போன தியேட்டர் உரிமையாளர்.

thalapathy vijay unseen

விஜயின் படங்கள் என்றாலே மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும். தளபதி விஜயின் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகும் போது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வார்கள். படம் வெளியாகும் முதல் நாள் தூங்காத ரசிகர்களும் ஏராளமானோர்.

விஜய் மீது தீராத அன்பு கொண்ட ரசிகர்கள் அவருடைய படங்களை முதல் நாள் முதல் ஷோ பார்த்த பின் தான் ஓய்வார்கள் படம் ரிலீசுக்கு பின்னும் படத்தின் கலெக்ஷன் பற்றியும் விஜயின் சாதனைகளைப் பற்றியும் ட்ரெண்ட் செய்வார்கள்.

தமிழகத்தில் மட்டுமல்ல கேரளாவிலும் விஜயின் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. கேரள முன்னணி நடிகர்கள் தங்களது படத்தை ரிலீஸ் செய்யும் போது விஜய் படம் ரிலீஸ் ஆகப் போவது தெரிந்தால் தங்களது படத்தை வேறொரு தேதியில் வைத்துக்கொள்வார்கள்.

அந்த அளவிற்கு விஜயின் மார்க்கெட் கேரளாவில் பெரிய அளவில் உள்ளது. ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் தலைவா திரைப்படம் திரையிட தடை விதித்தபோது கூட கேரளாவில் அந்தப் படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து பெரிய ஆச்சரியத்தை கொடுத்தனர் கேரள ரசிகர்கள்.

தற்பொழுது விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் என்ற மாபெரும் வெற்றிப் படம் வெளியாகி 22 வருடம் ஆகிவிட்டது. அந்தப் படத்தில் விஜய் குட்டி என்ற கதாபாத்திரத்திலும் சிம்ரன் ருக்கு என்ற கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி இருப்பார்கள் குறிப்பாக சிம்ரன் அவர்கள் பார்வையற்ற பெண்ணாக நடித்து அசத்தி இருப்பார்.

தற்பொழுது கேரளா திருவனந்தபுரத்தில் விஜய் ரசிகர்கள் துள்ளாத மனம் துள்ளும் படத்தை ரீ ரிலீஸ் செய்தார்கள். இருபத்தி இரண்டு வருடத்துக்கு பிறகு துள்ளாத மனம் துள்ளும் படம் தியேட்டரில் வெளியான பின்னும் அந்த படத்திற்கு கிடைத்த ரெஸ்பான்ஸை பார்த்து ஆச்சரியப்பட்டு வருகிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.

Exit mobile version