Home CINEMA NEWS சமந்தாவின் ஓ சொல்றியா மாமாவை விடுங்க..!!! இந்த ரெண்டையும் பார்த்தீங்களா மிரண்டு போன ரசிகர்கள்.

சமந்தாவின் ஓ சொல்றியா மாமாவை விடுங்க..!!! இந்த ரெண்டையும் பார்த்தீங்களா மிரண்டு போன ரசிகர்கள்.

samantha unseen images

சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகை. பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வந்தார் .

கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கூட ஜெஸ்ஸி கதாபாத்திரத்தில் அதாவது திரிஷாவின் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தார் அவருக்கு ஜோடியாக நாக சைதன்யா நடித்திருந்தார். தெலுங்கு இண்டஸ்ட்ரியில் மாபெரும் நடிகர் நாக அர்ஜுன் அவர்களது மகன் நாக சைதன்யா அவர்களுக்கும் சமந்தாவிற்கும் காதல் ஏற்பட்டு பல வருடங்களாக ஒன்றாக சுற்றி வந்தனர்.

நாக சைதன்யா தனது வீட்டில் சமந்தாவை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று எடுத்துச் சொல்லி தனது குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுமதி பெற்றபின் சமந்தாவை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் நன்றாக சென்று கொண்டு இருந்த சமந்தா – நாகசதன்யா வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டது அதற்கு காரணம் சமந்தா நடித்த ஒரு சில படங்கள் தான் காரணம் என்று ஒரு தரப்பு கூறிவருகிறது. தற்போது சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்து விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார்.

விவாகரத்தால் மனமுடைந்து போன சமந்தா அமைதி தேடி இமயமலைக்கு சென்று சில நாட்கள் ஓய்வு எடுத்து வந்தார் அதன் பின் தற்போது விஜய்சேதுபதியின் காத்துவாக்குல 2 காதல் படத்தில் சில காட்சிகளில் நடித்து வந்தார் இந்நிலையில் தெலுங்கில் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா நடித்து வெளியான புஷ்பா என்ற படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார் சமந்தா.

சமீபத்தில் புஷ்பா திரைப்படம் தியேட்டரில் வெளியானது சமந்தாவின் ஓ சொல்றியா மாமா என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் பெரிய ஹிட் பாடலாக அமைந்தது அந்தப் பாடலுக்கு சமந்தாவின் நடன அசைவுகள் ரசிகர்களை கவர்ந்து பல தியேட்டர்களில் பாடலை ரிப்பீட் கேட்டார்களாம் ரசிகர்கள்.

அந்தப் பாடலில் ஆண்கள் பெண்களை தப்பான பார்வையில் பார்க்கும் படி வரிகள் இருந்ததால் பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் தெரிவித்திருந்தார்கள் அதை எல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாத படக்குழுவினர்கள் படத்தை ரிலீஸ் செய்தார்கள் அந்த பாடலில் சமந்தா வரும் போது கிடைத்த ரெஸ்பான்ஸை பார்த்து மிரண்டு போய் உள்ளார்கள் தெலுங்கு சினிமாக்காரர்கள்.

ஒரே பாடல் என்றாலும் அமோக வரவேற்பை கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் சமந்தா தற்போது ஓய்வில் இருக்கும் சமந்தா தனது செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார் இரு பெரிய நாய்களை செல்லமாக வளர்த்து வரும் சமந்தா அதனை கட்டிப்பிடித்துக்கொண்டு உறங்குவது போல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு பெருசா இருக்கு பக்கத்துல போனாலே கடிச்சிடும் போல என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Exit mobile version