Home NEWS கொம்பனுடன் நேரத்தை செலவிட்டு மகிழ்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர்..!!! அவரின் வளர்ப்பு காளை புகைப்படங்கள் இதோ.

கொம்பனுடன் நேரத்தை செலவிட்டு மகிழ்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர்..!!! அவரின் வளர்ப்பு காளை புகைப்படங்கள் இதோ.

vijayabaskar spend time with komban

விஜயபாஸ்கர் தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் சிறப்பாக இவரது பணியை தொடர்ந்து செய்து வருகிறார். அதிமுக அமைச்சர்களின் சிறப்பாக செயல்படும் அமைச்சர்கள் பட்டியலில் விஜயபாஸ்கருக்கு பெரிய இடம் உண்டு. அந்த அளவிற்கு கட்சிக்காக மட்டும் அல்லாமல் எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் மக்கள் பெரிதாக பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று கடுமையாக உழைத்து கொண்டு இருக்கும் ஒரு நல்ல மனிதர்.

விஜயபாஸ்கர் அவர்கள் இந்த கொரோனா காலத்தில் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர பெரிதும் பாடுபட்டு வந்தார். அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று கொரோனா நிலவரத்தை தெரிந்து கொண்டு அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை முதல்வரிடம் ஆலோசித்து இந்த கடினமான நேரத்தில் சிறப்பாக செயல்பட்டார் .

கொரோனாவிற்கு முன்பு தமிழ்நாட்டையே உலுக்கிய சம்பவம் ஒன்று நடந்தது. சுஜித்தின் மரணம் ஒரு அப்பாவி குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்த பொழுது அங்கு இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிருக்காக போராடி வந்தது. அங்கு விரைந்து சென்று அந்த சிறுவனை காப்பாற்றுவதற்காக பெரிதும் முயற்சி செய்து வந்தார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

சரியாக உண்ணாமல் சரியாக தூங்காமல் சுஜித்தை எப்படியாவது மீட்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கடைசிவரை போராடி பார்த்தார். அந்த சிறுவனை காப்பாற்ற முடியாமல் போனவுடன் கண்கலங்கி போனார் மனிதர்.

தற்பொழுது விஜயபாஸ்கர் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை இன்று காலை தனது காளைகளுடன் நேரத்தை செலவிட்டு அதனை புகைப்படமாக வெளியிட்டு உள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.

Exit mobile version