பிரபல ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங்க் இவருடைய மரணத்தில் ஏகப்பட்ட மர்மங்கள் இருப்பதாகவும் விசாரணை வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் சில பிரபலங்கள் கேட்டுக்கொண்டதால் மரணம் பற்றி தீவிரமாக பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர் காவல்துறையினர்.
தற்கொலை செய்து கொள்வது தவறு என்று தனது படத்தின் மூலம் சொல்லிய சுஷாந்த் சிங் இரண்டு வருடங்களுக்கு முன் ஜூன் மாதம் 16ஆம் தேதி தனது அறையில் தூக்கு மாட்டி இறந்து விட்டார்.
ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்ளும் ஆள் இல்லை அந்த அளவிற்கு அவருக்கு யாரோ நெருக்கடி கொடுத்து இருக்கிறார்கள் என்று கூறி வந்தார்கள். அதுமட்டுமல்லாமல் பாலிவுட் வட்டாரத்தில் சுஷாந்த் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் செய்த காரியம் தான் இது என்றெல்லாம் எழுத ஆரம்பித்தார்கள்.
இளம் வயதிலேயே நடிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள காரணம் என்னவாக இருக்கும் என்று புரியாத புதிராக இருந்து. காதல் தோல்வியாக இருக்கும் அல்லது ஏதாவது பைனான்சியல் பிரச்சனையாக இருக்குமோ என்று விசாரிக்கப்பட்டு வந்தது.
சில நபர்கள் சுஷாந்த் சிங்கிற்கு கஞ்சா பழக்கம் உண்டு என்று கூறி வந்தார்கள். சுஷாந்த் சிங்கின் நெருங்கிய தோழியான ரியா சக்கரவர்த்தி அவர்களை பல கோணத்தில் விசாரித்து வந்தார்கள்.
தற்பொழுது கிடைத்துள்ள தகவலின்படி சுல்தான் சிங்கிற்கு கஞ்சா வாங்கி கொடுத்ததாக பிரபல நடிகை ரியா மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
இதையும் படிங்க : இளம் வயதிலே நடிகை ரோஜாவின் மகளுக்கு கிடைத்த மாபெரும் விருது…!!! குவியும் வாழ்த்துக்கள்.
போதை பொருள் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள தகவல்படி 2020 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2020 செப்டம்பர் வரை இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் ரியா கஞ்சா பொட்டலங்கள் வாங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சுஷாந்த்திற்கு ரியா கஞ்சா கொடுத்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சுஷாந்த் மரணத்தில் முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழும் என்கிறார்கள் பாலிவுட் வட்டாரத்தினர்.