பிரபல நடிகை மீனா தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை. மீனா பெங்களூரை சார்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.
மீனாவிற்கு நைனிகா என்ற மகளும் உள்ளார். விஜயின் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து அசத்தியிருந்தார். நன்றாக சென்று கொண்டிருந்த மீனாவின் வாழ்க்கையில் கடந்த மூன்று மாதங்களாக பல போராட்டங்களை சந்தித்துள்ளார் மீனா. தனது அன்புக்கு கணவர் வித்யாசாகர் நுரையீரல் செயலிழந்து மருத்துவமனையில் மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
மீனாவும் தன்னால் முடிந்த அளவிற்கு என்னென்ன தனது கணவருக்கு செய்ய வேண்டுமோ அத்தனை மருத்துவத்தையும் செய்து பார்த்து விட்டு கடைசியில் நுரையீரல் மாற்று சிகிச்சை செய்வதற்காக தயாராக இருந்தார்.
திடீரென்று வித்யாசாகர் அவர்களின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது. 48 வயதில் நுரையீரல் பாதிப்பால் உயிர் இழந்தார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கியது.
மீனா தனது கணவர் மறைவுக்குப் பிறகு முதல் முதலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் நாங்கள் துயரத்தில் இருக்கிறோம் என்று கோரிக்கையும் வைத்தார்.
இன்று மீனாவின் திருமண நாள் கணவர் இல்லாத இந்த நாளில் தனது கணவரை நினைத்து உருகி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் மீனா. அதில் நீங்கள் அழகான ஆசீர்வாதமாக இருந்தீர்கள் ஆனால் மிக விரைவில் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டீர்கள் எங்கள் (என்) இதயங்களில் என்றென்றும் உள்ளீர்கள்.
அன்பு மற்றும் பிரார்த்தனைகளை அனுப்பியதற்காக உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நல்ல இதயங்களுக்கு நானும் எனது குடும்பத்தினரும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். எங்களுக்கு அவர்கள் கண்டிப்பாக தேவை. அன்புடனும் அக்கறையுடனும் ஆதரவுடனும் எங்களைப் பொழியும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைக் கொண்டிருப்பதற்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அன்பை உணர்கிறோம் என்று உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டு தனது கணவரின் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.