Home CINEMA NEWS இரண்டு வருடங்களுக்கு பிறகு தியேட்டரில் வெளியாகும் சூர்யாவின் படம்…!!! எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் தேதி இதோ.

இரண்டு வருடங்களுக்கு பிறகு தியேட்டரில் வெளியாகும் சூர்யாவின் படம்…!!! எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் தேதி இதோ.

suriya etharkum thunidhavan release date march 10

சூர்யா சூரரைப்போற்று என்ற படத்தின் மூலம் மீண்டும் ஒரு பெரிய COMEBACK கொடுத்து தற்போது ஜெய்பீம் படத்தின் மூலம் பெரிய பிரபலத்தை மீண்டும் அடைந்த நடிகர். ஒரு உண்மை சம்பவத்தை வெளி உலகத்திற்கு கொண்டு வந்து சேர்த்த சூர்யாவிற்கு பல தரப்பிலிருந்து பாராட்டுக்கள் தெரிவித்து வந்தார்கள்.

சூர்யாவின் தொடர் ஹிட் படங்கள் இரண்டுமே திரையரங்கில் வெளிவராமல் OTT தளத்தில் வெளியானது அவருடைய ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. இந்நிலையில் தற்பொழுது இரண்டு வருடங்களுக்குப் பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்கில் வெளியாகியிருக்கும் செய்தி அவருடைய ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷத்தைக் கொடுத்து உள்ளது.

தற்போது சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார்கள். இந்தப் படத்தை இயக்குனர் பாண்டி ராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்துள்ளார்.

இமானின் இசையில் வெளியான பாடல்களில் உள்ளம் உருகுதையா மற்றும் சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில் உருவான சும்மா சுருன்னு என்ற பாடல் ரசிகர்களிடம் பிரபலமாகி வரும் இந்நிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து உள்ளார்கள் படத்தின் தயாரிப்பாளர்கள் சன் பிக்சர்ஸ்.

எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு சூர்யாவின் திரைப்படம் திரைக்கு வருவதால் அவரது ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

Exit mobile version