Home NEWS முதலில் ஸ்டாலின் என்றாவது மக்களுக்காக நிதி கொடுத்து உள்ளாரா என்று கேட்டவருக்கு புகைப்படம் மூலம் பதிலடி...

முதலில் ஸ்டாலின் என்றாவது மக்களுக்காக நிதி கொடுத்து உள்ளாரா என்று கேட்டவருக்கு புகைப்படம் மூலம் பதிலடி கொடுத்த தொண்டர்கள்..!!!

stalin jayalalitha

தமிழக சட்டசபைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தற்போது முதலமைச்சராக தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் ஸ்டாலின் அவர்கள் முதல்வரின் கொரோனா நிவாரணத்தொகை கொடுக்க விருப்பப்பட்டவர்கள் கொடுக்கலாம் என்று அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து பிரபலங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சினிமா நடிகர் நடிகைகள் அனைவரும் தங்களால் முடிந்த தொகையை முதல்வரின் கொரோனா நிவாரணத்தொகைக்கு நேரில் சென்று கொடுத்து வருகிறார்கள்.

ஒரு நிறுவனமோ அல்லது தனிநபரோ முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஏதேனும் தொகை அனுப்ப விருப்பப்பட்டால் இணையதளம் மூலமாக அனுப்பலாம் என்று இணையதளம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Corona Relief Fund Link : https://ereceipt.tn.gov.in/cmprf/Interface/CMPRF/CMPRF_EntryForm

அந்த இணையதளத்தில் நன்கொடையாளர்கள் விவரங்களை தேதி வாரியாக அவர்கள் எவ்வளவு பணம் அளித்துள்ளார்கள் என்பதை பெயருடன் குறிப்பிட்டுள்ளது தமிழக அரசு.

இந்நிலையில் சிலர் ஸ்டாலின் அவர்கள் என்றாவது நிதி கொடுத்து இருக்கிறாரா என்று ஒரு தரப்பில் கேள்விகள் கேட்டு வர தற்பொழுது இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது அதில் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் சுனாமி வந்தபோது அப்பொழுது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களை சந்தித்து சுனாமி நிவாரண தொகை வழங்கிய புகைப்படம் தற்போது இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Exit mobile version