சாதாரண ஒருவர் சினிமாவில் நுழைவது பெரிய கடினமானது அதில் சிவகார்த்திகேயன் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் முதலில் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்தார்.
இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் எல்லாம் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. டிவியிலிருந்து சினிமாவிற்கு வருபவர்கள் ஹீரோவாக முடியாது என்ற பார்முலாவை உடைத்தெறிந்து சிவகார்த்திகேயன் தற்பொழுது குடும்ப ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.
முதலில் நகைச்சுவை கதாபாத்திரங்கள் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த சிவகார்த்திகேயன் அதன்பின் தனது படங்களில் விஜய் பாணியில் கமர்சியல் எல்மெண்ட்ஸ் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார். தற்பொழுது முன்னணி கதாநாயகர்களுக்கு அடுத்து சிவகார்த்திகேயன் ஒரு பெரிய இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்து இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவருடைய வியூகம் தான்.
விஜய் போல ஒரு படம் மக்களை எண்டெர்டைன் செய்ய வேண்டும் எல்லா தரப்பு ரசிகர்களும் அதனை ரசிக்க வேண்டும் என்று பார்முலாவை வைத்துள்ள சிவகார்த்திகேயன் தற்பொழுது விஜய்க்கு அடுத்த படி இளைஞர்களை கவர்ந்து வருகிறார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தொழிலதிபர்கள், பிரபலங்கள் மற்றும் சினிமா நடிகர்- நடிகைகள் அனைவரும் கொரோனா நிதி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தல அஜித் 25 லட்சம் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தார்.
அதனை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் தமிழக அரசின் கொரோனா நிவாரண தொகையை நேரில் முதல்வரை சந்தித்து 25 லட்சம் காசோலையாக வழங்கியுள்ளார். அதன்பின் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசிவிட்டு வீடு திரும்பியுள்ளார் சிவகார்த்திகேயன்.
மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய முன்வரும் ஒவ்வொருவரும் மாஸ் ஹீரோ தான்.