Home CINEMA NEWS திடீரென்று சிவகார்த்திகேயனை வீட்டிற்கு அழைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி…!!! என்ன நடந்தது தெரியுமா?

திடீரென்று சிவகார்த்திகேயனை வீட்டிற்கு அழைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி…!!! என்ன நடந்தது தெரியுமா?

sivakarthikeyan rajinikanth

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான திரைப்படம் தான் DON கல்லூரி மாணவராக இருக்கும் சிவகார்த்திகேயன் தனக்கு பிடிக்காமலே அப்பாவின் பிடிவாதத்தால் இன்ஜினியரிங் கல்லூரியில் சேருகிறார் கல்லூரியில் ஆசிரியர்களை டார்ச்சர் செய்யும் DONனாக வலம் வருகிறார்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் அதை நாம் கண்டுபிடித்த பின்பு தான் அவரவர் வாழ்க்கை அவரவர் வாழ ஆரம்பிப்பார்கள். தனக்குள் உள்ள திறமையை கண்டுபிடித்து அதற்காக உழைத்தால் வாழ்க்கையில் DON ஆகலாம் என்ற ஒரு வரி கதை தான் திரைப்படம். கடைசியில் வாழ்க்கையில் சிவகார்த்திகேயன் ஜெயித்தார் DON ஆனாரா என்பதே மீதி கதை.

இந்த திரைப்படம் வெளியான முதல் நாளே நல்ல வரவேற்பைப் பெற்றது ஜாலியாக செல்லும் திரைக்கதை கடைசி 40 நிமிடத்தில் கண் கலங்க வைக்கும் சென்டிமென்ட் காட்சிகள் என்று படம் நகர்ந்ததால் DON அனைவரையும் கவர்ந்தது.

சமுத்திரக்கனி சிவகார்த்திகேயன் நடிப்பு இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கியது. DON வெற்றிக்கு எஸ் ஜே சூர்யா அவர்களுக்கும் ஒரு பெரிய பங்கு உண்டு மனிதர் பின்னி பெடல் எடுத்து விட்டார்.

திரைப்படம் பார்த்துவிட்டு பிரபலங்கள் சிவகார்த்திகேயனை புகழ்ந்து வரும் இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிவகார்த்திகேயனை அழைத்து நேரில் பாராட்டியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை சந்தித்த சிவகார்த்திகேயன் அந்த நிகழ்வைப் பற்றி தற்பொழுது பகிர்ந்துள்ளார்.

சிவகார்த்திகேயன் கூறியிருப்பது இந்திய சினிமாவின் DON சூப்பர்ஸ்டாரை சந்தித்தேன் அவருடைய ஆசீர்வாதத்தை பெற்றேன் அந்த 60 நிமிடங்கள் என் வாழ்வில் மறக்க முடியாத தருணம். தலைவா டான் படத்தை பார்த்து பாராட்டியதற்கு மிக்க நன்றி என்று கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.

Exit mobile version