சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருந்தவர் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் புகழ்பெற்றவர் சித்ரா. இவர்சில நாட்களுக்கு முன்பு தான் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்று இரவு வரை அவர் படப்பிடிப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரவு வரை வேலை பார்த்துவிட்டு எப்படி ஒரு மணி நேரத்தில் மனம் மாறி சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது யாருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் தற்போது விசாரித்து வருகின்றனர் போலீசார். மேலும் அவருடன் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அவரது வருங்கால கணவரான ஹேம்நாத்தையும் தற்கொலைக்கு தூண்டுதல் பேரில் கைதுசெய்துள்ளனர்.
இந்நிலையில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் பொழுது ஒரு ரோஸ் மற்றும் நீலம் கலந்த நைட்டி ஒன்றை அணிந்திருந்தார். அவர் நடித்து திரைக்கு வர உள்ள கால்ஸ் என்ற திரைப்படத்தின் இயக்குனர் வாங்கி தந்த நைட்டி தான் அது. படப்பிடிப்பிற்காக அந்த நைட்டி அவருக்கு வாங்கித் தரப்பட்டது.
அந்த நைட்டி அவருக்கு மிகவும் பிடித்து உள்ளதால் அதை தானே எடுத்துக் கொள்ளவா என்று கேட்க அதை இயக்குனரும் தந்துள்ளார். இதுகுறித்து அந்த இயக்கத்தின் இயக்குனர் சித்ரா விருப்பப் பட்டதால் நான் கொடுத்தேன். இந்த நைட்டி அணிந்து அவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொள்வார் என எதிர்பார்க்கவில்லை. மேலும் அந்த நைட்டியுடன் சித்ரா படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
சித்ராவின் நீண்ட நாள் கனவான வெள்ளித்திரை கனவு நிறைவேறியுள்ளது, ஆனால் அதை பார்க்க அவர் இல்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது என்றும் இயக்குனர் கூறியுள்ளார்.