Home CINEMA NEWS நம்ம சூரரை போற்று பொம்மியா இது..!!! மலையாள சேனல் ஒன்றில் இப்படி ஒரு செயலை செய்தாரா...

நம்ம சூரரை போற்று பொம்மியா இது..!!! மலையாள சேனல் ஒன்றில் இப்படி ஒரு செயலை செய்தாரா ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!!!

soorarai potru suriya

அபர்ணா பாலமுரளி தமிழில் ஏற்கனவே இரண்டு படங்கள் நடித்திருந்தாலும் சூரரை போற்று படம் தான் அபர்ணா முரளியின் நடிப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றது. சூரரைப்போற்று படத்தில் அபர்ணா பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பல இளைஞர்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்தார்.

இப்படி ஒரு துணையான மனைவி நமக்கு கிடைக்க மாட்டாங்களா என்று சிங்கிள்சை ஏங்க வைத்தார். அந்தப்படத்தில் பொம்மி என்ற கதாபத்திரத்தில் சூர்யாவின் அன்பு மனைவியாக நடித்திருப்பார். கணவன் கஷ்டப்படும்போது கூடவே துணையாக நிற்கும் மனைவியாக நடித்து மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தார் அபர்ணா.

அபர்ணா முதலில் மலையாள படங்களில் நடித்துக்கொண்டிருந்தார் தமிழில் 8 தோட்டாக்கள் மற்றும் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்த சர்வம் தாளமயம் இரண்டு படங்கள் மட்டுமே நடித்த அபர்ணா முரளி சூரரைப்போற்று படத்தில் பொம்மியாகவே வாழ்ந்து இருந்தார்.

அபர்னாவின் தந்தை ஒரு இசைமைப்பாளராம் அவர் மலையாளத்தில் இசை அமைத்து பல ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். அபர்ணாவின் அம்மா ஷோபா அவர்கள் வழக்கறிஞர் இவரும் நிறைய படங்கள் பின்னணி பாடகியாக மலையாள திரையுலகில் பாடியுள்ளார். அபர்ணா முரளி முறையாக இந்தியன் கிளாசிக்கல் மியூசிக் கற்றுக் கொண்டவர். ஒரு சில மலையாளப் படங்களில் பின்னணி பாடகியாகவும் இருந்துள்ளார்.

மலையாள சேனல் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அபர்ணா சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்றிருந்த கையிலே ஆகாசம் என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார். ரசிகர்கள் இப்படி ஒரு குரல் வளம்மா பொம்மிக்கு என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Exit mobile version