Home NEWS இன்றுடன் 2000 ரூபாய் தவணை தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிமுடித்திருக்க வேண்டும் –...

இன்றுடன் 2000 ரூபாய் தவணை தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிமுடித்திருக்க வேண்டும் – தமிழக அரசு.

tamilnadu government 2000 rs issue last date

தமிழகத்தில் உள்ள 2 கோடியே 10 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாம் தவணையாக தலா 2000 ரூபாய் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் கடந்த 15ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது இந்த இரண்டாம் தவணை நிவாரணத்தை வருகிற 25ஆம் தேதிக்குள் அதாவது இன்று வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது covid-19 நோய் தொற்று காரணமாக நடைமுறையில் உள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தவணை தொகை 2000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் தொகுப்பு கடந்த 15ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த தவணைத் தொகை மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பை வருகிற 25-ஆம் தேதிக்குள் விநியோகம் செய்து முடிக்க வேண்டுமென அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version