Home CINEMA NEWS கணவர் நாகசைதன்யாவை விட்டு பிரிந்த பிரபல நடிகை சமந்தா..!!! அவரே வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியில் திரையுலகத்தினர்..!!!

கணவர் நாகசைதன்யாவை விட்டு பிரிந்த பிரபல நடிகை சமந்தா..!!! அவரே வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியில் திரையுலகத்தினர்..!!!

samantha divorce husband nagachaitanya

சமந்தா தமிழ் சினிமாவிற்கு விண்ணைத்தாண்டி வருவாயா என்ற சிம்பு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதே படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு அதில் ஹீரோயினாக சமந்தாவும் ஹீரோவாக நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா அவர்களும் நடித்திருந்தனர்.

அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு பானாகாத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். பானா காத்தாடி தான் சமந்தாவிற்கு முதல் படம் அதர்வாவிற்கும் முதல் படம். அதனைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு படங்களில் நடித்து வந்த சமந்தா ஏகப்பட்ட வெற்றி படங்களை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கொடுத்துள்ளார். இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. தற்பொழுது நயன்தாரா வருங்கால கணவன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்து வருகிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடித்த போதே நாகசைதன்யாவிற்கும் சமந்தாவுக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கிறிஸ்தவ முறைப்படியும் இந்து முறைப்படியும் திருமணம் செய்து கொண்டனர்.

வெளிநாடுகள் இருவரும் ஜோடியாக சென்று வருவது அதனை இணையத்தில் பதிவு என்று ஜாலியாக சென்ற சமந்தா வாழ்க்கையில் சில பிரச்சினைகள் வந்துள்ளது.

இரண்டு மாதங்களாக சமந்தாவிற்கும் நாக சைதன்யா அவர்களுக்கும் விவாகரத்து ஆகப் போகிறது என்று செய்திகள் மீடியா வெளியிட்டு வந்தது. சமந்தா திருப்பதி கோயிலுக்கு சென்ற போது கூட ஒரு செய்தி சேகரிப்பாளர் ஒருவர் இந்த சம்பவத்தை பற்றி கேட்க அதற்கு சமந்தா உங்களுக்கு புத்தி இல்லையா கோயிலுக்கு வந்து இருக்கிறேன் என்று கூறிவிட்டு கோபமாக சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

தற்பொழுது அவசர அவசரமாக ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் தனது கணவர் நாக சைதன்யா அவர்களை விட்டு பிரிவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தனித்தனி பாதைகளில் பயணிக்க உள்ளோம் 10 ஆண்டு நட்பு அவர்கள் வாழ்வில் நல்ல பிணைப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் மேலும் மீடியா ரசிகர்கள் இந்த கடினமான காலத்தில் எங்கள் பிரைவசியை மதிக்குமாறு நடிகை சமந்தா கேட்டுக்கொண்டார்.

கணவரை விட்டு பிரிந்து விட்டதாக சமந்தா வெளியிட்ட அறிக்கை கோலிவுட்டை மட்டுமல்லாமல் தோழியும் பெரும் பரபரப்பாகியுள்ளது.

Exit mobile version