பிரபல நடிகை ரம்பா தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி கன்னடம் படங்களில் ரவுண்டு கட்டி முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ஒரு நேரத்தில் ரம்பாவின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் தவம் கிடந்தார்கள்.
அந்த அளவிற்கு படு பிசியாக இருந்தார் ரம்பா. தமிழில் உழவன் என்ற படத்தில் அறிமுகமான ரம்பா தொடர்ந்து தமிழ் படங்களிலும் நடித்து வந்தார் குறிப்பாக ரம்பாவை தொடையழகி ரம்பா என்று தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
அறிமுக நாயகர்கள் முதல் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை பெரிதாக்கி கொண்ட ரம்பா கடைசியாக 2010-ம் ஆண்டு தமிழில் பெண் சிங்கம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதன்பின் கனடாவைச் சேர்ந்த ஸ்ரீலங்கன் தமிழ் தொழிலதிபர் இந்திர குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இவர் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சோசியல் மீடியாவில் தலைகாட்டிய ரம்பா தனது மகன் ஷிவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மகனுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.