நடிகர் லாரன்ஸ் நடன இயக்குனராக மக்களை கவர்ந்த இவர் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிகராகவும் வெற்றி பெற்றவர் குறிப்பாக லாரன்ஸ் காஞ்சனா என்ற பேய் படத்தை தானே நடித்து இயக்கியிருந்தார். அந்தப் படம் கொடுத்த மாபெரும் வரவேற்பால் அதனைத் தொடர்ந்து 2 பாகங்கள் எடுத்தார்.
லாரன்ஸ் எடுத்த காஞ்சனா படம் வசூல் ரீதியாக 100 கோடியை கடந்து சென்றதால் அதனை தொடர்ந்து பேய் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார் லாரன்ஸ். சிவலிங்கா என்ற படத்தில் நடித்த லாரன்ஸிற்கு அந்தப் படமும் ஓரளவு நல்ல வரவேற்பை கொடுத்ததால் பி வாசு இயக்கத்தில் தற்பொழுது சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே பி வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி முதல் பாகம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
சந்திரமுகி 2க்கு முன் தற்போது ருத்ரன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் லாரன்ஸ். ருத்ரன் படத்தில் லாரன்ஸ் ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். சமீபத்தில் நடந்த ருத்ரன் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் லாரன்ஸ் செய்த செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ருத்ரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 3000 மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டனர். இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ஆடியோ வெளியீட்டு விழாவில் 150 குழந்தைகளை தத்தெடுத்து கல்வியை வழங்க உள்ளதாக அறிவித்திருந்தார்.
மேலும் ருத்ரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் 150 குழந்தைகளை தத்தெடுத்து கல்வியை கொடுப்பது நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அனைவரது ஆசீர்வாதமும் எனக்கு வேண்டும் என்றும் இந்த புதிய முயற்சியை வழங்குவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார். ராகவா லாரன்ஸ் ஏற்கனவே தனது தாயார் பெயரில் அறக்கட்டளை ஒன்று நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.