Home CINEMA NEWS இப்போ இல்லாட்டி எப்போ…? என் கணவர் சி.எம். ஆக கூடாதா ராதிகா ஆவேச பேட்டி..!!!...

இப்போ இல்லாட்டி எப்போ…? என் கணவர் சி.எம். ஆக கூடாதா ராதிகா ஆவேச பேட்டி..!!! அடுத்த டார்கெட் சின்ராசு சி.எம் ஆகுறது தான் கலாய்க்கும் நெட்டிசன்கள்.

sarathkumar politics

தமிழக அரசியலில் கலைஞர் கருணாநிதி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வெற்றிடத்தை இன்னும் யாரும் நிரப்பவில்லை இன்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார் சரத்குமார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவிலில் நடந்த சமத்துவ மக்கள் கட்சியின் தென்மண்டல பொறுப்பாளர் கூட்டத்தில் சரத்குமார் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் பேசினார் அதற்குமுன் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் கூட்டணியில் பெரிய கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடும் போது நமது கட்சியின் தனித்துவம் இல்லாமல் போய்விடுகிறது அதுமட்டுமல்லாமல் சில திட்டங்களை செயல்படுத்தும் பொழுது கருத்து சொல்ல உரிமை இல்லாமல் போய்விடுகிறது.

தனிச் சின்னத்தில் போட்டியிட்டால் தான் சுதந்திரமாக செயல்பட முடியும் என்று கூறியவர் ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்றது போல பேசிக்கொண்டிருக்கிறார் 100 நாள்களில் பொது மக்கள் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பேன் என்று கூறி வருகிறார் அது எப்படி சாத்தியமாகும் அது வெறும் வாக்கு உறுதியாகவே கடைசிவரை இருக்கும் என்று கூறினார்.

ராதிகா இது குறித்து மேடையில் பேசியபோது என் கணவர் முதலமைச்சர் ஆவதற்கு என்ன வேண்டும் அவருக்கு படிப்பு இல்லையா தகுதி இல்லையா திறமை இல்லையா எல்லாம் அவரிடம் இருக்கிறது அவர் வரவேண்டும் அவருக்கு பின் நாங்கள் நிற்போம் என்று கூறினார்.

இனி மெகா சீரியலில் இருந்து நான் விலகி இருப்பேன் ஆனால் படங்கள் செய்வேன் அதேநேரத்தில் வெப் சீரிஸிலும் நடிப்பேன். என்னை தற்பொழுது புரட்சித் திலகம் சரத்குமார் அவர்கள் என்னை வேளச்சேரியில் பொறுப்பாளராக அறிவித்திருக்கிறார். நான் வந்து தினம் செயல்படுவேன் என்று கூறிய அவர் ரஜினி கூறியது போல இப்போ இல்ல நா எப்போ என்று கூறினார். அதனைத் தொடர்ந்து நான் கலைஞர் அவர்களின் மகள் போல கலைஞர் போல ஒரு தலைவரை பார்த்துவிட்டு இன்றைக்கு இருக்கிற தலைவர்களின் தரத்தை பார்க்கும்பொழுது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

அப்பேர்ப்பட்ட தலைவரின் பெயரை ஏன் இப்படிக் கெடுக்குறாங்கனு என்று நினைக்கத் தோன்றுகிறது. உங்கள் தலைவர் புரட்சி திலகம் சரத்குமாருக்கு நீங்கள் பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த பேச்சைக் கேட்ட நெட்டிசன்கள் ராதிகாவின் பேச்சைக் கேட்கும் போது சூரிய வம்சம் படத்தில் வரும் சின்ராசு மேடைப்பேச்சு வசனங்கள் தான் ஞாபகத்துக்கு வருகிறது என்று கூறிவருகின்றனர்.

Exit mobile version