கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்பொழுது விஜயகாந்த் அவர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று மருத்துவம் பார்த்து வருகிறார்கள் அவருடைய குடும்பத்தினர்.
சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வலது காலில் இருந்து மூன்று விரல்களை எடுத்துள்ளதாக செய்திகள் வெளி வந்து கொண்டிருந்தது விஜயகாந்தின் உடல் நிலையை அனைத்து கட்சி தலைவர்களும் மற்றும் பிரபலங்களும் தொடர்ந்து நலம் விசாரித்து வந்தனர்.
விஜயகாந்த் எப்படி இருக்கார் என்ன ஆச்சு விஜயகாந்த் அவர்களுக்கு என்று ரசிகர்கள் பதட்டத்தில் இருக்கும் இந்த நேரத்தில் விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா அவர்கள் நேற்று பத்திரிகையாளரை சந்தித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
நாங்க விஜயகாந்த் அவர்களை அடிக்கடி மருத்துவமனைக்கு அவருடைய சிகிச்சைக்காக அழைத்துச் செல்வது வழக்கம் மாதத்துக்கு ஒரு வாட்டி அல்லது 10 நாட்களுக்கு ஒரு வாட்டி என்று அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டு தான் இருப்போம் மீடியா எங்களோட நிலையை நீங்களும் உணர்ந்து கொள்ளணும் என்று நான் கேட்டு கொள்கிறேன்.
நிச்சயமாக கேப்டன் அவர்களின் உடல்நிலையில் சற்று தோய்வு இருக்கிறது எப்போதெல்லாம் மருத்துவர்கள் வர சொல்கிறார்களோ விஜயகாந்த் அவர்களை அழைத்து சென்றது தான் இருக்கிறோம் நல்லா இருக்காரு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று பிரேமலதா அவர்கள் தெரிவித்துள்ளார்.