Home CINEMA NEWS மரணத்தை முன்கூட்டியே கணித்தாரா பிரதாப் போத்தன்…!!! அதிர்ச்சியை ஏற்படுத்தும் அவருடைய பதிவு…!!!

மரணத்தை முன்கூட்டியே கணித்தாரா பிரதாப் போத்தன்…!!! அதிர்ச்சியை ஏற்படுத்தும் அவருடைய பதிவு…!!!

prathap pothen facebook post

நடிகர் மற்றும் இயக்குனர் பிரதாப் போத்தன் நேற்று காலமானார். தூக்கத்திலே அவரது உயிர் பிரிந்ததாக தகவல். ராதிகா அவர்களின் முதல் கணவர் பிரதாப் போத்தன் அவர்கள் தான் சில கருத்து வேறுபாடுகளால் திருமணமான ஒரே வருடத்தில் பிரிந்தார்கள்.

பல வெற்றி படங்களை இயக்கி நடித்திருந்த பிரதாப்போத்தன் அவர்களின் மரணம் தமிழ் திரையுலகை மட்டுமல்லாமல் பிறமொழி திரையுலகினருக்கும் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் அனைவரிடமும் அன்பாக பழகிய மனிதர்.

நேற்று பிரதாப் போத்தன் அவர்களின் உடலுக்கு கமலஹாசன் மணிரத்னம் இன்று பலர் நேரில் தங்களது இரங்கலை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சமூகவலைதளத்தில் ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது அது என்னவென்றால் பிரதாப்போத்தன் தன்னுடைய மரணத்தை முன் கூட்டியே கணித்தார் என்பது தான் பிரதாப் போத்தன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மரணம் குறித்து சில நாட்களுக்கு முன்பு பதிவிட்டுள்ளார்.

அதில் நீங்கள் ஒரு நோயின் காரணத்தை சரியாக கண்டுபிடித்து குணப்படுத்த அதன் அறிகுறிகளை மட்டுமே குணப்படுத்தி வருகிறீர்கள் என்றால் நீங்கள் மரணம் வரை மருந்துகளை தான் நம்பி இருக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க : இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக இதனால் தான் நடித்தேன் பவி டீச்சர் பிரிகிடா ஓபன் டாக்..!!!

மற்றொரு பதிவில் சிலர் அதிகமாக அக்கறை காட்டுகிறார்கள் ஆனால் என்னைப் பொறுத்தவரை அது காதல் என்பேன் வாழ்க்கை என்பது கடைசி வரை கட்டணங்கள் செலுத்தி கலைந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவருடைய மற்றொரு பதிவை பார்க்கையில் நாம் தினமும் எச்சில் விழுங்குவதால் கூட மரணம் ஏற்படுகிறது என்று ஒரு பதிவு போட்டுள்ளார் இதை வைத்து பார்க்கையில் மரணத்தை முன்கூட்டியே கணித்தாரா. ஒரு நாள் முன்பே மரணத்தைப் பற்றி கூறியிருக்கிறாரே மனிதர் என்று நெட்டிசன்கள் வருத்தப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : அமீர் பிறந்த நாளில் தனது காதலை சொன்ன பாவனி குவியும் வாழ்த்துக்கள்..!!! ஒரு வழியா END CARD போட்டாச்சு..!!!
Exit mobile version