Home NEWS தமிழக அரசின் கொரோனா நிதி தொகைக்கு பணம் இல்லாததால் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க...

தமிழக அரசின் கொரோனா நிதி தொகைக்கு பணம் இல்லாததால் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை அனுப்பிய பெண்..!!! நெகிழ்ச்சி சம்பவம்.

2 gram gold chain for CM corona relief fund

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கொரோனா நிதி தொகை யாரேனும் கொடுக்க விருப்பப்பட்டால் கொடுக்கலாம் என்று அறிவித்த நாளில் இருந்தே ஏகப்பட்ட பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அனைவரும் தங்கள் பங்கிற்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

பணக்காரர்கள் இருந்து ஏழை மக்கள் வரை தங்களால் முடிந்த தொகையை முதல்வர் கொரோனா நிதிக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். மதுரையை சார்ந்த சிறுவர் ஒருவர் சைக்கிள் வாங்குவதற்காக சேர்த்த தொகையை முதல்வரின் நிவாரணத் தொகைக்கு அனுப்பி வைத்தார் அதனை அறிந்த முதல்வர் தொலைபேசியில் அந்த சிறுவனுடன் பேசியது மட்டுமல்லாமல் அந்த சிறுவனுக்கு சைக்கிள் ஒன்றை பரிசாக கொடுத்திருந்தார்.

ஒரு நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆக பணிபுரிந்து வந்த ஒருவர் தனது ஒரு மாத சம்பளம் ஆகிய 10 ஆயிரம் ரூபாயை முதல்வரின் நிவாரண தொகைக்கு கொடுத்திருந்தார். அந்த பாதுகாவலரை அழைத்து நேரில் சந்தித்து பாராட்டினார் முதல்வர் ஸ்டாலின்.

இது போன்ற ஏதாவது நிகழ்வுகள் ஒரு பக்கம் நடந்து கண்டிருக்க சௌமியா என்ற பெண் முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார் அதில் என்னிடம் பணம் இல்லாததால் கொரோனா தொகையாக எனது கழுத்தில் இருந்த இரண்டு பவுன் செயினை நிதியாக கொடுக்க விரும்புகிறேன் என்று கடிதத்துடன் தன்னுடைய செயினையும் அனுப்பியுள்ளார்.

அத்துடன் அது கடிதத்தில் ஐயா என் பெயர் சௌமியா நான் பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி எனது தந்தை ஆவின் ஓய்வு பெற்ற பணியாளர் என் உடன்பிறந்த மூத்த சகோதரிகள் இரண்டு பேர் இவர்களுக்கு திருமணமாகி விட்டது. எனது தந்தை பணியிலிருந்து பெற்ற சம்பளத் தொகை அனைத்தும் எங்களை படிக்க வைக்கவும் சகோதரிகளுக்கு திருமணம் செய்யவும் செலவு செய்து விட்டார்.

நாங்கள் மூன்று பெண்களும் பட்டதாரிகள் ஆனால் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை எனது தந்தை பணி ஓய்வு பெற்று வந்த சில மாதங்களில் என் அம்மாவிற்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு நுரையீரல் பழுதடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்கள். எனது தந்தை பணி ஓய்வு பெற்ற சேமிப்புத் தொகை அனைத்தையும் அம்மாவின் மருத்துவச் செலவிற்காக செலவு செய்து விட்டார் அம்மாவை காப்பாற்ற முடியவில்லை. அம்மாவின் மருத்துவச் செலவு மட்டும் 13 லட்சம் ஆகிவிட்டது.

எங்களுக்கு சொந்த வீடு கிடையாது ஆகையால் அம்மா இறந்தபிறகு மேட்டூரில் குடியிருந்த நாங்கள் வாடகை வீட்டை காலி செய்து விட்டு தற்போது எனது தந்தை பிறந்த கிராமத்திற்கு வந்து வாடகை வீட்டில் தங்கி உள்ளோம். எனது தந்தைக்கு பணி ஓய்வு தொகையாக 7000 ரூபாய் மட்டும் கிடைக்கிறது வீட்டு வாடகை 3,000 ரூபாய் போக 4000 ரூபாய் வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறோம்.

திருமணமாகிய எனது சகோதரிகள் எங்களுக்கு உதவி செய்கின்ற வசதி வாய்ப்பு அவர்களுக்கு இல்லை ஆகையால் மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறோம்.

எனக்கு அம்மாவாக இருந்து எனக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால் நன்றியுடன் இருப்பேன் எனக்கு அரசினர் வேலை வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை எனது ஊரின் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால் கூட போதும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இந்த வேலைவாய்ப்பை எனது தாய் மீண்டும் உயிர் பெற்று வந்ததாக தாய் அன்புடன் எதிர்பார்த்துக் காத்திருப்பேன் நன்றியுடன் சௌமியா என்று உருக்கமான ஒரு கடிதத்தை முதல்வருக்கு எழுதி இருந்தார்.

இந்த கடிதத்தை பார்த்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மேட்டூர் அணையை திறக்க சென்ற போது பெறப்பட்ட மனுக்களின் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது.

பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து உள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்.

Exit mobile version